Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

தாயுமான சுவாமிகள் அருளிய
திருப்பாடற்றிரட்டு -பாகம் 4

tAyumAnavarin tirupATaRRiRaTtu - part 4
In tamil script, Unicode/utf-8 format




Acknowledgements:
Our Sincere thanks go to Digital Library of India for providing scanned
image files of this work. This work has been prepared via Distributed-Proofreading
and we thank the following persons for their help in the preparation of the etext:
V. Devarajan, Sakthikumaran, S. Karthikeyan, Nalini Karthikeyan
R. Navaneethakrishnan, Sonia and S. Subathra.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2008.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/

source acknowledgement:
தாயுமான சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய
"திருப்பாடற்றிரட்டு"
திருத்தணிகை சரவணப்பெருமாளையர் அவர்கள்
பிரதிக்கிணங்க பரிசோதிக்கப்பட்டு ஊ. புஷ்பரதசெட்டியார் தமது
சென்னை கலாரத்நாகர அச்சுக்கூடத்தில் பதிக்கப்பட்டது
பிரஜோற்பத்தி வருடம்
-----------

இப்பகுதியில் அடங்கிய பாடல்கள் :

43. பராபரக்கண்ணி
44. பைங்கிளிக்கண்ணி
45. எந்நாட்கண்ணி
46. காண்பேனோவென்கண்ணி
47. ஆகாதோவென்கண்ணி
48. இல்லையோவென்கண்ணி
49. வேண்டாவோவென்கண்ணி
50. நல்லறிவேயென்கண்ணி
51. பலவகைக்கண்ணி
52. நின்றநிலை
53. பாடுகின்றவனுவல்
54. சங்கர சங்கர சம்பு
55. அகவல்
56. வண்ணம்
---------

    43. பராபரக்கண்ணி


    சீராருந்தெய்வத்திருவருளாம்பூமிமுதற்
    பாராதியாண்டபதியேபராபரமே. - (1)

    கண்ணாரக்கண்டோர்கருப்பொருள்காணாமலருள்
    விண்ணூடிருந்தவின்பவெற்பேபராபரமே. - (2)

    சிந்தித்தவெல்லாமென்சிந்தையறிந்தேயுதவ
    வந்தகருணைமழையேபராபரமே. - (3)

    ஆராவமுதேயரசேயானந்தவெள்ளப்
    பேராறேமோனப்பெருக்கேபராபரமே. - (4)

    ஆரறிவாரென்னவனந்தமறையோலமிடும்
    பேரறிவேயின்பப்பெருக்கேபராபரமே. - (5)

    உரையிறந்தவன்பருளத்தோங்கொளியாயோங்கிக்
    கரையிறந்தவின்பக்கடலேபராபரமே. - (6)

    எத்திக்குந்தானாகியென்னிதயத்தேயூறித்
    தித்திக்குமானந்தத்தேனேபராபரமே. - (7)

    திக்கொடுகீழ்மேலுந்திருவருளாம்பொற்பறிந்தோர்
    கைக்குள்வளர்நெல்லிக்கனியேபராபரமே. - (8)

    முத்தெபவளமேமொய்த்தபசும்பொற்சுடரே
    சித்தேயென்னுள்ளத்தெளிவேபராபரமே. - (9)

    கண்ணேகருத்தேயென்கற்பகமேகண்ணிறைந்த
    விண்ணேயானந்தவியப்பேபராபரமே. - (10)

    வாக்காய்மனதாய்மனவாக்கிறந்தவர்பாற்
    றாக்காதேதாக்குந்தனியேபராபரமே. - (11)

    பார்த்தவிடமெல்லாம்பரவெளியாய்த்தோன்றவொரு
    வார்த்தைசொல்லவந்தமனுவேபராபரமே. - (12)

    வானந்தமண்ணினந்தம்வைத்துவைத்துப்பார்க்கவென்
    க், கானந்தந்தந்தவரசேபராபரமே. - (13)

    அன்பைப்பெருக்கியெனதாருயிரைக்காக்கவந்த
    வின்பப்பெருக்கேயிறையேபராபரமே. - (14)

    வானமெல்லாங்கொண்டமெளனமணிப் பொட்டகத்து
    க், கானபணியானவணியேபராபரமே. - (15)

    ஓடுமிருநிதியுமொன்றாகக்கண்டவர்க
    ணாடும்பொருளானநட்பேபராபரமே. - (16)

    சித்தநினைவுஞ்செயுஞ்செயலுநீயெனவா
    ழுத்தமர்கட்கானவுறவேபராபரமே. - (17)

    போதாந்தப்புண்ணியர்கள்போற்றிசயபோற்றியெனும்
    வேதாந்தவீட்டில்விளக்கேபராபரமே. - (18)

    முத்தாந்தவீதிமுளரிதொழுமன்பருக்கே
    சித்தாந்தவீதிவருந்தேவேபராபரமே. - (19)

    ஈனந்தருமுடலமென்னதியானென்பதற
    வானந்தம்வேண்டியலந்தேன்பராபரமே. - (20)

    என்புருகிநெஞ்சமிளகிக்கரைந்துகரைந்
    தன்புருவாய்நிற்கவலந்தேன்பராபரமே. - (21)

    சுத்தவறிவாய்ச்சுகம்பொருந்தினல்லாலென்
    சித்தந்தெளியாதென்செய்வேன்பராபரமே. - (22)

    மாறாவனுபூதிவாய்க்கினல்லாலென்மயக்கந்
    தேறாதென்செய்வேன்சிவமேபராபரமே. - (23)

    தாகமறிந்தின்பநிட்டைதாராயேலாகெடுவேன்
    றேகம்விழுந்திடினென்செய்வேன்பராபரமே. - (24)

    அப்பாவென்னெய்ப்பில்வைப்பேயாற்றுகிலேன்போ
    ற்றியென்று,செப்புவதல்லால்வேறென்செய்வேன்ப
    ராபரமே. - (25)

    உற்றறியுமென்னறிவுமுட்கருவிபோற்சவிமாண்
    டற்றுமின்பந்தந்திலையேயையாபராபரமே. - (26)

    சொல்லாலடங்காச்சுகக்கடலில்வாய்மடுக்கி
    னல்லாலென்றாகமறுமோபராபரமே. - (27)

    பாராயோவென்னைமுகம்பார்த்தொருகாலென்கவலை
    தீராயோவாய்திறந்துசெப்பாய்பராபரமே. - (28)

    ஓயாதோவென்கவலையுள்ளேயானந்தவெள்ளம்
    பாயாதோவையாபகராய்பராபரமே. - (29)

    ஓகோவுனைப்பிரிந்தாருள்ளங்கனலில்வைத்த
    பாகோமெழுகோபகராய்பராபரமே. - (30)

    கூர்த்தவறிவத்தனையுங்கொள்ளைகொடுத்துன்னருளைப்
    பார்த்தவனானென்னைமுகம்பாராய்பராபரமே. - (31)

    கடலமுதேதேனேயென்கண்ணேகவலைப்
    படமுடியாதென்னைமுகம்பார்நீபராபரமே. - (32)

    உள்ளமறிவாயுழப்பறிவாய்நானேழை
    தள்ளிவிடின்மெத்தத்தவிப்பேன்பராபரமே. - (33)

    கன்றினுக்குச்சேதாகனிந்திரங்கல்போலவெனக்
    கென்றிரங்குவாய்கருணையெந்தாய்பராபரமே. - (34)

    எண்ணாதவெண்ணமெலாமெண்ணியெண்ணியேழை
    நெஞ்சம், புண்ணாகச்செய்ததினிப்போதும்பராபரமே. - (35)

    ஆழித்துரும்பென்வேயங்குமிங்குமுன்னடிமை
    பாழிற்றிரிவதென்னபாவம்பராபரமே. - (36)

    கற்றவறிவாலுனைநான்கண்டவன்போற்கூத்தாடிற்
    குற்றமென்றென்னெஞ்சேகொதிக்கும்பராபரமே. - (37)

    ஐயோவுனைக்காண்பானாசைகொண்டதத்தனையும்
    பொய்யோவெளியாப்புகலாய்பராபரமே. - (38)

    துன்பக்கண்ணீரிற்றுளைந்தேற்குன்னானந்த
    வின்பக்கண்ணீர்வருவதெந்நாள்பராபரமே. - (39)

    வஞ்சனையும்பொய்யுமுள்ளேவைத்தழுக்காறாயுளறு
    நெஞ்சனுக்குமுண்டோநெறிதான்பராபரமே. - (40)

    பாசம்போய்நின்றவர்போற்பாராட்டியானாலு
    மோசம்போனேனான்முறையோபராபரமே. - (41)

    நன்றறியேன்றீதறியேனானென்றுநின்றவனா
    ரென்றறியேனானேழையென்னேபராபரமே. - (42)

    இன்றுபுதிதன்றேயெளியேன்படுந்துயர
    மொன்றுமறியாயோவுரையாய்பராபரமே. - (43)

    எத்தனைதான்சன்மமெடுத்தெத்தனைநான்பட்டதுய
    ரத்தனையுநீயறிந்ததன்றோபராபரமே. - (44)

    இந்தநாட்சற்றுமிரங்கிலையேற்காலன்வரு
    மந்தநாட்காக்கவல்லாரார்காண்பராபரமே. - (45)

    உற்றுற்றுநாடியுளமருண்டபாவியைநீ
    சற்றிரங்கியாளத்தகாதோபராபரமே. - (46)

    எள்ளளவுநின்னைவிடவில்லாவெனைமயக்கிற்
    றள்ளுதலாலென்னபலன்சாற்றாய்பராபரமே. - (47)

    பாடிப்படித்துலகிற்பாராட்டிநிற்பதற்கோ
    தேடியெனையடிமைசேர்த்தாய்பராபரமே. - (48)

    சொன்னத்தைச் சொல்வதல்லாற் சொல்லறவென்
    சொல்லிறுதிக், கென்னத்தைச்சொல்வே னெளியேன்
    பராபரமே. - (49)

    சொல்லும்பொருளுமற்றுச்சும்மாவிருப்பதற்கே
    யல்லும்பகலுமெனக்காசைபராபரமே. - (50)

    நேசநிருவிகற்பநிட்டையலலாலுன்னடிமைக்
    காசையுண்டோநீயறியாதன்றேபராபரமே. - (51)

    துச்சனெனவேண்டாமித்தொல்லுலகிலல்லல்கண்டா
    லச்சமிகவுடையேனையாபராபரமே. - (52)

    கண்ணாவாரேனுமுனைக்கைகுவியாராயினந்த
    மண்ணாவார்நட்பைமதியேன்பராபரமே. - (53)

    கொல்லாவிரதங்குவலயமெல்லாமோங்க
    வெல்லார்க்குஞ்சொல்லுவதென்னிச்சைபராபரமே.(54)

    எத்தாற்பிழைப்பேனோவெந்தையேநின்னருட்கே
    பித்தானேன்மெத்தவுநான்பேதைபராபரமே. - (55)

    வாயினாற்பேசாமெளனத்தைவைத்திருந்துந்
    தாயிலார்போனான்றளர்ந்தேன்பராபரமே. - (56)

    அன்னையிலாச்செய்போலலக்கணுற்றேன்கண்ணார
    வென்ன கத்திற்றாய்போலிருக்கும்பராபரமே. - (57)

    உற்றுநினைக்கிற்றுயரமுள்ளுள்ளேசெந்தீயாய்ப்
    பற்றநொந்தேனென்னைமுகம்பார்நீபராபரமே. - (58)

    பொய்யனிவனென்றுமெள்ளப் போதிப்பார்சொற்கேட்டுக்
    கைவிடவும்வேண்டாமென்கண்ணேபராபரமே. - (59)

    எண்ணமறிந்தேயிளைப்பறிந்தேயேழையுய்யும்
    வண்ணந்திருக்கருணைவையாய்பராபரமே. - (60)

    நாட்டாதேயென்னையொன்றினாட்டியிதமகிதங்
    காட்டாதேயெல்லாநீகண்டாய்பராபரமே. - (61)

    உன்னைநினைந்துன்னிறைவினுள்ளேயுலாவுமென்னை
    யன்னைவயிற்றின்னமடைக்கர்த்தேபராபரமே. - (62)

    பரமுனக்கென்றெண்ணும்பழக்கமேமாறா
    வரமெனக்குத்தந்தருளென்வாழ்வேபராபரமே. - (63)

    வந்தித்துநின்னைமறவாக்கடனாகச்
    சிந்திக்கநின்னதருள்செய்யாய்பராபரமே. - (64)

    எவ்வுயிருமென்னுயிர்பேர்லெண்ணியிரங்கவுநின்
    றெய்வவருட்கருணைசெய்யாய்பராபரமே. - (65)

    வெட்டவெளிப்பேதையன்யான் வேறுகபடொன்ற
    றியேன்,சிட்டருடன்சேரனந்ததெண்டன்பராபரமே.- (66)

    இரவுபகலற்றவிடத்தேகாந்தயோகம்
    வரவுந்திருக்கருணைவையாய்பராபரமே. - (67)

    மால்காட்டிச்சிந்தைமயங்காமனின்றுசுகக்
    கால்காட்டிவாங்காதேகண்டாய்பராபரமே. - (68)

    எப்பொருளுநீயெனவேெயண்ணிநான்றோன்றாத
    வைப்பையழியாநிலையாவையாய்பராபரமே. - (69)

    சும்மாவிருப்பதுவேசுட்டற்றபூரணமென்
    றெம்மாலறிதற்கெளிதோபராபரமே. - (70)

    முன்னொடுபின்பக்கமுடியடிநாப்பண்ணறநின்
    றன்னொடுநானிற்பதென்றோசாற்றாய்பராபரமே. - (71)

    மைவ்வண்ணந்தீந்தமெளனிசொன்னதெவ்வண்ண
    மவ்வண்ணநிட்டையருளாய்பராபரமே. - (72)

    வித்தன்றியாதும்விளைவதுண்டோநின்னருளாஞ்
    சித்தன்றியாங்களுண்டோசெப்பாய்பராபரமே. - (73)

    ஆங்காரமற்றுன்னறிவானவன்பருக்கே
    தூங்காததூக்கமதுதூக்கும்பராபரமே. - (74)

    சிந்தையவிழ்ந்தவிழ்ந்துசின்மயமாநின்னடிக்கே
    வந்தவர்க்கேயின்பநிலைவாய்க்கும்பராபரமே. - (75)

    சொல்லாடாவூமரைப்போற்சொல்லிறந்துநீயாகி
    னல்லாலெனக்குமுத்தியாமோபராபரமே. - (76)

    பேச்சாகாமோனம்பிறவாமுளைத்தென்றற்
    காச்சாச்சுமேற்பயனுண்டாமோபராபரமே. - (77)

    கெட்டியென்றுன்னன்பர்மலங் கெட்டயர்ந்தோர்பூ
    ரணமாந்,தொட்டிலுக்குட்சேய்போற் றுயின்றார்பரா
    பரமே. - (78)

    காட்டவருளிருக்கக்காணாதிருண்மலத்து
    நாட்டமெனக்குவரனன்றோபராபரமே. - (79)

    எத்தன்மைக்குற்றமியற்றிடினுந்தாய்பொறுக்கு
    மத்தன்மைநின்னருளுமன்றோபராபரமே. - (80)

    எத்தனையோதேர்ந்தாலுமென்னாலேயின்பமுண்டோ
    சித்துருவேயின்பச்சிவமேபராபரமே. - (81)

    மண்ணொடுவிண்காட்டிமறைந்துமறையாவருளைக்
    கண்ணொடுகண்ணாகவென்றுகாண்பேன்பராபரமே. (82)

    பஞ்சரித்துநின்னைப்பலகாலிரந்ததெல்லா
    மஞ்சலெனும்பொருட்டேயன்றோபராபரமே. - (83)

    எங்கெங்கேபார்த்தாலுமெவ்வுயிர்க்குமவ்வுயிரா
    யங்கங்கிருப்பதுநீயன்றோபராபரமே. - (84)

    அனைத்துமாய்நின்றாயேயான்வேறோநின்னை
    நினைக்குமாறெங்கேநிகழ்த்தாய்பராபரமே. - (85)

    நின்போதத்தாலேநினைப்புமறப்புமென்றா
    லென்போதமெங்கேயியம்பாய்பராபரமே. - (86)

    ஒன்றைநினைந்தொன்றைமறந்தோடுமனமெல்லாநீ
    யென்றறிந்தாலெங்கேயியங்கும்பராபரமே. - (87)

    கொழுந்தில்வயிரமெனக்கோதறவுள்ளன்பி
    லழுந்துமவர்க்கேசுகமுண்டாகும்பராபரமே. - (88)

    பற்றும்பயிர்க்குப்படர்கொழுந்துபோற்பருவம்
    பெற்றவர்க்கேநின்னருடான்பேறாம்பராபரமே. (89)

    யோகியர்க்கேஞானமொழுங்காம்பேரன்பான
    தாகியரும்யோகமுன்னேசார்ந்தோர்பராபரமே. (90)

    அல்லும்பகலுமறிவாகிநின்றவர்க்கே
    சொல்லும்பொருளுஞ்சுமைகாண்பராபரமே. - (91)

    எச்சிலென்றுபூவையிகழ்ந்தோர்க்குனைப்போற்றப்
    பச்சிலையுங்கிள்ளப்படுமோபராபரமே. - (92)

    அந்தக்கரணமடங்கத்துறப்பதுவே
    யெந்தத்துறவினுநன்றெந்தாய்பராபரமே. - (93)

    தன்னையறிந்தாற்றலைவன்மேற்பற்றலது
    பின்னையொருபற்றுமுண்டோபேசாய்பராபரமே.(94)

    அன்பாற்கரைந்துகண்ணீராறுகண்டபுண்ணியருக்
    குன்பால்வரவழிதானுண்டோபராபரமே. - (95)

    தன்னையறிந்தருளேதாரகமாநிற்பதுவே
    யுன்னையறிதற்குபாயம்பராபரமே - (96)

    கற்றகலையானிலைதான்காணுமோகாண்பதெல்லா
    மற்றவிடத்தேவெளியாமன்றோபராபரமே. - (97)

    கண்மூடிக்கண்விழித்துக்காண்பதுண்டோநின்னருளாம்
    விண்மூடினெல்லாம்வெளியாம்பராபரமே. - (98)

    நேரேநினதருளென்னெஞ்சைக்கவரினொன்றும்
    பாரேன்சுகமும்படைப்பேன்பராபரமே. - (99)

    வான்காணவேண்டின்மலையேறலொக்குமுன்னை
    நான்காணப்பாவனைசெய்நட்டம்பராபரமே. - (100)

    வாதனைவிட்டுன்னருளின் மன்னினல்லால்வேறுமொறு
    சாதனைதானுண்டோநீசாற்றாய்பராபரமே. - (101)

    பாரகமும்விண்ணகமும்பற்றாகநிற்பதருட்
    டாரகத்தைப்பற்றியன்றோசாற்றாய்பராபரமே.- (102)

    விளக்குந்தகளியையும்வேறென்னார்நின்னைத்
    துளக்கமறச்சீவனென்றுசொல்வார்பராபரமே. - (103)

    பாராதிநீயாப்பகர்ந்தாலகமெனவு
    மாராயுஞ்சீவனுநீயாங்காண்பராபரமே. - (104)

    பொய்யைப்பொய்யென்றறியும்போதத்துக்காதரவுன்
    மெய்யருளேயன்றோவிளம்பாய்பராபரமே. - (105)

    வருவான்வந்தேனெனல்போன்மன்னியழியுஞ்சகத்தைத்
    தெரிவாகவில்லையென்றதீரம்பராபரமே. - (106)

    மாயாசகமிலையேன்மற்றெனக்கோர்பற்றுமிலை
    நீயேநானென்றுவந்துநிற்பேன் பராபரமே. - (107)

    வானாதிநீயெனவேவைத்தமறையென்னையுநீ
    தானாகச்சொல்லாதோசாற்றாய்பராபரமே. - (108)

    வெள்ளக்கருணைமதவேழமாநின்னருட்கென்
    கள்ளக்கருத்தேகவளம்பராபரமே. - (109)

    வண்டாய்த்துவண்டுமௌனமலரணைமேற்
    கொண்டார்க்கோவின்பங்கொடுப்பாய்பராபரமே. - (110)

    மாயைமுதலாம்வினைநீமன்னுயிர்நீமன்னுயிர்தேர்ந்
    தாயுமறிவானதுநீயன்றோபராபரமே. - (111)

    என்னறிவும்யானுமெனதென்பதுவுமாமிவைக
    ணின்னவையேயன்றோநிகழ்த்தாய்பராபரமே. - (112)

    பாரறியாதண்டப் பரப்பறியாதுன்பெருமை
    யாரறிவார்நானோவறிவேன்பராபரமே. - (113)

    அண்டமனைத்திலுமாயப்பாலுக்கப்பாலுங்
    கொண்டநின்னையாரறிந்துகொள்வார்பராபரமே. - (114)

    ஒப்புயர்வொன்றின்றியொலிபுகாமோனவட்டக்
    கப்பாலுக்காம்வான்பொருணீகண்டாய்பராபரமே. - (115)

    என்போலெளியவருமெங்கெங்கும்பார்த்தாலு
    முன்போல்வலியவருமுண்டோபராபரமே. - (116)

    பார்க்கினண்டபிண்டப்பரப்பனைத்துநின்செயலே
    யார்க்குஞ்செயலிலையேயையாபராபரமே. - (117)

    ஒன்றேபலவேயுருவேயருவேயோ
    வென்றேயழைப்பதுன்னையென்றுபராபரமே. (118)

    செப்புவதெல்லாஞ்செபநான்சிந்திப்பதெல்லாநின்
    னொப்பிறியானமெனவோர்ந்தேன்பராபரமே. (119)

    ஆரிருந்தென்னார்போயென்னாரமுதாநின்னருளின்
    சீரிருந்தாலுய்வேன்சிவமேபராபரமே. - (120)

    வஞ்சநமன்வாதனைக்கும்வன்பிறவிவேதனைக்கு
    மஞ்சியுனையடைந்தேனையாபராபரமே. - (121)

    எந்தப்படியுன்னிதயமிருந்ததெமக்
    கந்தப்படிவருவதன்றோபராபரமே. - (122)

    எந்தெந்தநாளுமெனைப்பிரியாதென்னுயிராய்ச்
    சிந்தைகுடிகொண்டவருட்டேவேபராபரமே.- (123)

    அஞ்சலஞ்சலென்றடிமைக்கப்போதைக்கப்போதே
    நெஞ்சிலுணர்த்துநிறைவேபராபரமே. - (124)

    என்னையுன்றன்கைக்களித்தார்யாவரென்னையான்கொடு
    த்துப்,பின்னையுன்னாற்பெற்றநலம்பேசேன்பராபரமே.- (125)

    வாய்பேசாவூமையெனவைக்கவென்றோநீமௌனத்
    தாயாகவந்தருளைத்தந்தாய்பராபரமே. - (126)

    தன்னைத்தந்தென்னைத்தடுத்தாண்டநின்கருணைக்
    கென்னைக்கொண்டென்னபலனெந்தாய்பராபரமே. - (127)

    மார்க்கண்டர்க்காகமறலிபட்டபாட்டையுன்னிப்
    பார்க்கினன்பர்க்கென்னப்யங்காண்பராபரமே. - (128)

    சுட்டியுணராமற்றுரியநிலையாய்வெளியில்
    விட்டநின்னையானோவியப்பேன்பராபரமே. - (129)

    சூதொன்றுமின்றியென்னைச்சும்மாவிருக்கவைத்தா
    யீதொன்றும்போதாதோவின்பம்பராபரமே. - (130)

    வாயெரென்றும்பேசாமௌனியாய்வந்தாண்ட
    தேயொன்றும்போதாதோவின்பம்பராபரமே. - (131)

    என்றுமிருந்தபடிக்கென்னையெனக்களித்த
    தொன்றும்போதாதோவுரையாய்பராபரமே. - (132)

    எண்டிசைகீழ்மேலானவெல்லாம்பெருவெளியாக்
    கண்டவிடத்தென்னையுநான்கண்டேன்பராபரமே. - (133)

    பித்தனையேதும்மறியாப்பேதையனையாண்டவுனக்
    கெத்தனைதான்றெண்டனிடுவேன்பராபரமே. - (134)

    தாயர்கர்ப்பத்தூடனமுந்தண்ணீருந்தந்தருளு
    நேயவுனையாரேநினையார்பராபரமே. - (135)

    விரிந்தமனமொடுங்கும்வெளையினானாகப்
    பரந்தவருள்வாழிபதியேபராபரமே. - (136)

    சிந்தனைபோய்நானெனல்போய்த்தேக்கவின்பமாமழை
    யை,வந்துபொழிந்தனைநீவாழிபராபரமே. - (137)

    தந்தேனேயோர்வசனந்தந்தபடிக்கின்பமுமாய்
    வந்தேனேயென்றனைநீவாழிபாராபரமே. - (138)

    மண்ணும்விண்ணும்வந்துவணங்காவோநின்னருளைக்
    கண்ணுறவுட்கண்டவரைக்கண்டாற்பராபரமே. - (139)

    என்றுங்கருணைபெற்றவின்பத்தபோதனர்சொல்
    சென்றசென்றதிக்கனைத்துஞ்செல்லும்பராபரமே. - (140)

    ஆடுவதும்பாடுவதுமானந்தமாகநின்னைத்
    தேடுவதுநின்னடியார்செய்கைபராபரமே. - (141)

    பொங்கியநின்றண்ணருளைப்புட்கலமாப்பெற்றவர்க
    ட்,கெங்கெழுந்தென்ஞாயிறியம்பாய்பராபரமே. - (142)

    பாலரொடுபேயர்பித்தர்பான்மையெனநிற்பதுவே
    சீலமிகுஞானியர்தஞ்செய்கைபராபரமே. - (143)

    உண்டுடுத்துப்பூண்டிங்குலகத்தார்போற்றிரியுந்
    தொண்டர்விளையாட்டேசுகங்காண்பராபரமே. - (144)

    கங்குல்பகலற்றதிருக்காட்சியர்கள்கண்டவழி
    யெங்குமொருவழியேயெந்தாய்பராபரமே. - (145)

    காயநிலையல்லவென்றுகாண்பாருறங்குவரோ
    தூயவருட்பற்றாத்தொடர்வார்பராபரமே. - (146)

    அப்புமுப்பும்போன்றவயிக்யபரானந்தர்தமக்
    கொப்புவமைசொல்லவும்வாயுண்டோபராபரமே. - (147)

    சித்தந்தெளிந்துசிவமானோரெல்லோர்க்குங்
    கொத்தடிமையானகுடிநான்பராபரமே. - (148)

    தம்முயிர்போலெவ்வுயிருந்தானென்றுதண்ணருள்கூர்
    செம்மையருக்கேவலென்றுசெய்வேன்பராபரமே. - (149)

    விண்ணுக்கும்விண்ணாகிமேவுமுனக்கியான்பூசை
    பண்ணிநிற்குமாறுபகராய்பராபரமே. - (150)

    நெஞ்சகமேகோயினினைவேசுகந்தமன்பே
    மஞ்சனநீர்பூசைகொள்ளவாராய்பராபரமே. - (151)

    கெட்டவழியாணவப்பேய்கீழாகமேலான
    சிட்டருனைப்பூசைசெய்வார்பராபரமே. - (152)

    கால்பிடித்துமூலக்கனலைமதிமண்டலத்தின்
    மேலெழுப்பிற்றேகம்விழுமோபராபரமே. - (153)

    பஞ்சசுத்திசெய்துநின்னைப்பாவித்துப் பூசைசெய்தால்
    விஞ்சியஞானம்விளங்கும்பராபரமே. - (154)

    அன்பர்பணிசெய்யவெனையாளாக்கிவிட்டுவிட்டா
    லின்பநிலைதானேவந்தெய்தும்பராபரமே. - (155)

    மூர்த்திதலந்தீர்த்தமுறையாற்றொடங்கினர்க்கோர்
    வார்த்தைசொலச்சற்குருவும்வாய்க்கும்பராபரமே. (156)

    விரும்புஞ்சரியைமுதன்மெய்ஞ்ஞானநான்கு
    மரும்புமலர்காய்கனிபோலன்றோபராபரமே. - (157)

    தானந்தவந்தருமஞ்சந்ததமுஞ்செய்வர்சிவ
    ஞானந்தனையணையநல்லோர்பராபரமே. - (158)

    சொன்னத்தைச்சொல்லித்துடிக்கின்றவாணவப்பேய்க்
    கின்னல்வருவதெந்நாளெந்தாய்பராபரமே. - (159)

    இன்றோவிருவினைவந்தேறியதுநானென்றோ
    வன்றேவிளைந்ததன்றோவாற்றேன்பராபரமே. - (160)

    எண்ணமுந்தனின்னைவிட வில்லையென்றால்யான்மு
    னமே,பண்ணவினையேதுபகராய்பராபரமே. - (161)

    என்னையின்னதென்றறியாவேழைக்குமாகெடுவேன்
    முன்னைவினைகூடன்முறையோபராபரமே. - (162)

    அறியாநான்செய்வினையையையாநீகூட்டுங்
    குறியேதெனக்குளவுகூறாய்ப்பராபரமே. - (163)

    என்னைக்கெடுக்கவிசைந்தவிருவினைநோய்
    தன்னைக்கெடுக்கத்தகாதோபராபரமே. - (164)

    வல்லமையேகாட்டுகின்றமாமாயைநானொருவ
    னில்லையெனினெங்கேயிருக்கும்பராபரமே. - (165)

    முக்குணத்தாலெல்லாமுளைக்கப்பிரகிருதிக்
    கிக்குணத்தைநல்கியதாரெந்தாய்பராபரமே. - (166)

    ஆற்றப்படாதுதுன்பமையவென்னாலென்மனது
    தேற்றப்படாதினியென்செய்வேன்பராபரமே. - (167)

    பூராயமாய்மனதைப்போக்கவறியாமலையோ
    யாராயலைந்தனரசேபராபரமே. - (168)

    சினமிறக்கக்கற்றாலுஞ்சித்தியெல்லாம்பெற்றாலு
    மனமிறக்கக்கல்லார்க்குவாயேன்பராபரமே. - (169)

    வாதுக்குவந்தெதிர்த்தமல்லரைப்போற்பாழ்த்தமன
    மேதுக்குக்கூத்தாடுதெந்தாய்பராபரமே. - (170)

    சூதாடுவோர்போற்றுவண்டுதுவண்டுமனம்
    வாதாடினென்னபலன்வாய்க்கும்பராபரமே. - (171)

    கொள்ளித்தேள்கொட்டிக் குதிக்கின்றபேய்குரங்
    காய்க்,கள்ளமனந்துள்ளுவதென்கண்டாய்பராபரமே.- (172)

    வந்ததையும்போனதையும்வைத்துவைத்துப்பார்த்தி
    ருந்தாற்,சிந்தையிதமகிதஞ்சேரும்பராபரமே. - (173)

    ஏறுமயிர்ப்பாலமுணர்விந்தவிடயங்கணெருப்
    பாறெனவுநன்றாவறிந்தேன்பராபரமே. - (174)

    பொறிவழியேயேழைபொறியாயுழல்வதுநின்
    னறிவின்விதித்தவிதியாமோபராபரமே. - (175)

    பாசசாலங்களெல்லாம்பற்றுவிடஞானவைவாள்
    வீசுநாளெந்நாள்விளம்பாய்பராபரமே. - (176)

    எந்தவுடலேனுமெடுத்தவுடனல்லதென்று
    சிந்தைசெயவந்ததிறஞ்செப்பாய்பராபரமே. - (177)

    பொய்யெல்லாமொன்றாப்பொருத்திவைத்தபொய்யு
    டலை,மெய்யென்றான்மெய்யாய்விடுமோபராபரமே.- (178)

    மின்னனையபொய்யுடலைமெய்யென்றுநம்பியையோ
    நின்னைமறக்கைநெறியோபராபரமே. - (179)

    நித்தியமொன்றில்லாதநீர்க்கும்மிழிபோன்றவுடற்
    கித்தனைதான்றுன்பமுண்டோலென்னேபராபரமே. - (180)

    தேகமிறுமென்றுசடர்தேம்புவதென்னித்திரையி
    னூகமறிந்தாற்பயந்தானுண்டோபராபரமே. - (181)

    ஏதைச்சுமையாவெடுப்பாரெடுத்தவுடற்
    சேதமுறின்யாதுபின்னேசெல்லும்பராபரமே. - (182)

    தோற்பாவைநாலாட்சுமையாகுஞ்சீவனொன்றிங்
    கார்ப்பாலெடுத்ததெவராலேபராபரமே. - (183)

    ஞாலத்தைமெய்யெனவேநம்பிநம்பிநாளுமென்றன்
    காலத்தைப்போக்கியென்னகண்டேன்பராபரமே.(184)

    பொய்யுலகவாழ்க்கைப்புலைச்சேரிவாதனைநின்
    மெய்யருளின்மூழ்கின்விடுங்காண்பராபரமே. - (185)

    நூலேணிவிண்ணேறநூற்குப்பருத்திவைப்பார்
    போலேகருவிநன்னூற்போதம்பராபரமே. - (186)

    சின்னஞ்சிறியார்கள்செய்தமணற்சோற்றையொக்கு
    மன்னுங்கலைஞானமார்க்கம்பராபரமே. - (187)

    வாசகஞானத்தால்வருமோசுகம்பாழ்த்த
    பூசலென்றுபோமோபுகலாய்பராபரமே. - (188)

    கேட்டதையேசொல்லுங்கிளிபோலநின்னருளி
    னாட்டமின்றிவாய்பேசனன்றோபராபரமே. - (189)

    வெளியாயருளில்விரவுமன்பர்தேக
    மொளியாய்ப்பிறங்கியதுமுண்டோபராபரமே.- (190)

    காலமொருமூன்றுங்கருத்திலுணர்ந்தாலுமதை
    ஞாலந்தனக்குரையார்நல்லோர்பராபரமே. - (191)

    கொல்லாவிரதமொன்றுகொண்டவரேநல்லோர்மற்
    றல்லாதார்யாரோவறியேன்பராபரமே. - (192)

    இல்லாதகாரியத்தையிச்சித்துச்சிந்தைவழி
    செல்லாமைநல்லோர்திறங்காண்பராபரமே. - (193)

    ஏதுவந்துமேதொழிந்துமென்னதியானென்னார்கள்
    போதநிலைகண்டபுலத்தோர்பராபரமே. - (194)

    ஆயிரஞ்சொன்னாலுமறியாதவஞ்சநெஞ்சப்
    பேயரொடுகூடிற்பிழைகாண்பராபரமே. - (195)

    மாயமயக்கொழிந்தார்மற்றொன்றைநாடுவரோ
    நேயவருணிலையினிற்பார்பராபரமே. - (196)

    நித்திரையிற்செத்தபிணநேருமுடற்கிச்சைவையாச்
    சுத்தர்களேநல்லதுறவோர்பராபரமே. - (197)

    எந்நெஞ்சமேனுமிரங்குமேநின்னருட்குக்
    கன்னெஞ்சருமுளரோகாட்டாய்பராபரமே. - (198)

    மந்தவறிவாகியின்பம்வாயாதிருந்தலைந்தாற்
    சிந்தைமயங்காதோவென்செய்வேன்பராபரமே. - (199)

    தேடினேன்றிக்கனைத்துந் தெண்டனிட்டேன்சிந்தை
    நைந்து, வாடினேனென்மயக்கமாற்றாய்பராபரமே.- (200)

    மடிமையெனுமொன்றைமறுத்தன்றோவென்னை
    யடிமைகொளல்வேண்டுமரசேபராபரமே. - (201)

    காலர்பயந்தீரவின்பக்காற்கபயமென்றெழுந்த
    மாலைவளர்த்தனையேவாழிபராபரமே. - (202)

    நீர்ப்புற்புதமாய்நினைவருட்கேநின்றழியப்
    பார்ப்பதல்லால்வேறுமொன்றைப்பாரேன்பராபரமே. (203)

    நீர்க்குமிழிபோலென்னினைவுவெளியாய்க்கரையப்
    பார்க்குமிடமெல்லாமென்பார்வைபராபரமே. - (204)

    ஆடியோய்பம்பரம்போலாசையுடனெங்குமுனைத்
    தேடியோய்கின்றேனென்செய்வேன்பராபரமே. - (206)

    வேதாந்தஞ்சித்தாந்தம்வேறென்னார்கண்களிக்கு
    நாதாந்தமோனநலமேபராபரமே. - (207)

    ஏதுக்குமுன்னைவிடவில்லையென்றாலென்கருத்தைச்
    சோதிக்கவேண்டாநான்சொன்னேன்பராபரமே. - (208)

    முத்தியிலுந்தேகமிசைமூவிதமாஞ்சித்திபெற்றோ
    ரெத்தனைபேரென்றுரைப்பதெந்தாய்பராபரமே. - (209)

    நீயன்றிநானார்நினைவாரென்னெனெஞ்சகமார்
    தாயன்றிச்சூலுமுண்டோசாற்றாய்பராபரமே. - (210)

    அங்கமேநின்வடிவமானசுகர்கூப்பிடநீ
    யெங்குமேனேனென்றதென்னேபராபரமே. - (211)

    கொள்ளைவெள்ளத்தண்ணருண்மேற்கொண்டுசுழித்
    தார்த்திழுத்தாற்,கள்ளமனக்கப்பலெங்கேகாணும்பரா
    பரமே. - (212)

    எக்கலையுங்கற்றுணர்ந்தோமென்றவர்க்குஞ்சம்மதஞ்
    சொல்,வக்கணையாலின்பம்வருமோபராபரமே. - (213)

    கல்லெறியப்பாசிகலைந்துநன்னீர்காணுநல்லோர்
    சொல்லுணரின்ஞானம்வந்துதோன்றும்பராபரமே.- (214)

    நின்னையுணர்ந்தோர்கடமைநிந்தித்தபேயறிஞ
    ரென்னகதிபெறுவாரெந்தாய்பராபரமே. - (215)

    என்னதியானென்னலற்றோரெங்கிருந்து பார்க்கினுநின்
    சன்னிதியாநீபெரியசாமிபராபரமே. - (216)

    சோற்றுத்துருத்திச்சுமைசுமப்பக்கண்பிதுங்கக்
    காற்றைப்பிடித்தலைந்தேன்கண்டாய்பராபரமே. - (217)

    உள்ளபடியொன்றையுரைக்கினவர்க்குள்ளுறவாய்க்
    கள்ளமின்றியன்பாய்க்களிப்பேன்பராபரமே. - (218)

    அடுத்தவியல்பாகவொன்றையான்பகர்வதல்லாற்
    றொடுத்ததொன்றையான்வேண்டிச் சொல்லேன்பராபரமே.

    உள்ளமறியாதொருவரொன்றையுன்னிப்பேசிலையோ
    துள்ளியிளங்கன்றாய்த்துடிப்பேன்பராபரமே. - (220)

    எல்லாருமின்புற்றிருக்கநினைப்பதுவே
    யல்லாமல்வேறொன்றறியேன்பராபரமே. - (221)

    முன்னாண்மெய்ஞ்ஞானமுனிவர்தவமீட்டுதல்போ
    லிந்நாளிற்காணவெனக்கிச்சைபராபரமே. - (222)

    கன்மமென்பதெல்லாங்கரிசறவேமெய்ஞ்ஞான
    தன்மநிலைசார்ந்ததன்பர்தன்மைபராபரமே. - (223)

    கண்டுயிலாதென்னறிவின்கண்ணூடேகாட்சிபெற
    மண்டியபேரொளிநீவாழிபராபரமே. - (224)

    நானானதன்மையென்றுநாடாமனாடவின்ப
    வானாகிநின்றனைநீவாழிபராபரமே. - (225)

    அகத்தூடணுவணுவாயண்டமெல்லாந்தானாய்
    மகத்தாகிநின்றனைநீவாழிபராபரமே. - (226)

    காரகமாங்கர்ப்பவரைக்கண்ணூடுமென்கண்ணே
    வாரம்வைத்துகாத்தனைநீவாழிபராபரமே. - (227)

    புரந்தோர்தந்தேசமென்பார்பூமியைப்போராடி
    யிரதோருந்தம்மதென்பார்ரென்னேபராபரமே. - (228)

    மூர்த்தியெல்லாம்வாழியெங்கண்மோனகுருவாழிய
    ருள்,வார்த்தையென்றும்வாழியன்பர்வாழிபராபரமே.- (229)

    சொல்லும்பொருளுந்தொடராவருணிறைவிற்
    செல்லும்படிக்கருணீசெய்தாய்பராபரமே. - (230)

    இற்றைவரைக்குள்ளாகவெண்ணரியசித்திமுத்தி
    பெற்றவர்களெத்தனைபேர்பேசாய்ப்பராபரமே. - (231)

    நாடுநகருநிசானாட்டியபாளயமு
    மீடுசெயுமோமுடிவிலெந்தாய்பராபரமே. - (232)

    தேடுந்திரவியமுஞ்சேர்ந்தமணிப்பெட்டகமுங்
    கூடவருந்துணையோகூறாய்பராபரமே. - (233)

    தேடாததேட்டினரேசெங்கைத்துலாக்கோல்போல்
    வாடாச்சமனிலையில்வாழ்வார்பராபரமே. - (234)

    நீராய்க்கசிந்துருகிநெட்டுயிர்த்துநின்றேனைப்
    பராததென்னோபகராய்ப்பராபரமே - (235)

    உள்ளபொருளாவியுடன்மூன்றுமன்றேதான்
    கொள்ளைகொண்டநீயென்குறைதீர்பராபரமே. - (236)

    ஆழ்ந்தாயேயிவ்வுலகிலல்லலெல்லாந்தீர்ந்தருளால்
    வாழ்ந்தாயேயென்றனைநீவாழிபராபரமே. - (237)

    தாராவருளையெல்லாந்தந்தெனையுநின்னருளில்
    வாராயோவென்றனைநீவாழிபராபரமே. - (238)

    ஆசையுன்மீதல்லாலருளியவேறுமொன்றிற்
    பாசம்வையேனின்கருணைப்பாங்காற்பராபரமே. - (239)

    ஆதியந்தநீகுருவாயாண்டதல்லானின்னையன்றிப்
    போதனையுமுண்டோபுகலாய்பராபரமே - (240)

    தானாகவந்துதடுத்தாண்டெனையின்ப
    வானாகச்செய்தவின்பவானேபராபரமே. - (241)

    பற்றற்றிருக்குநெறிபற்றிற்கடன்மலையுஞ்
    சுற்றநினைக்குமனஞ்சொன்னேன்பராபராமே. - (242)

    படிப்பற்றுக்கேள்வியற்றுப்பற்றற்றுச்சிந்தைத்
    துடிப்பற்றார்க்கன்றோசுகங்காண்பராபரமே. - (243)

    சத்தாகிநின்றோர்சடங்களிலிங்கமென
    வைத்தாருமுண்டேயென்வாழ்வேபராபரமே - (244)

    சித்தநிருவிகற்பஞ்சேர்ந்தாருடற்றீபம்
    வைத்தகர்ப்பூரம்போல்வயங்கும்பராபரமே. - (245)

    ஆதிகாலத்திலெனையாண்டனையேயிப்பானீ
    போதியெனினெங்கேநான்போவேன்பராபரமே. - (246)

    நாவழுத்துஞ்சொன்மலரோநாளுதிக்கும்பொன்மல
    ரோ, தேவையுனக்கின்னதென்றுசெப்பாய்பராபரமே.(247)

    கன்னறரும்பாகாய்க்கருப்புவட்டாய்க்கற்கண்டா
    யின்னமுதாயென்னுளிருந்தாய்பராபரமே. - (248)

    சிற்பரமேதற்பரமேதெய்வசுருதிசொன்ன
    வற்புதமேயன்பேயறிவேபராபரமே. - (249)

    அறிவிப்பானீயென்றாலைபம்புலன்கடந்தந்
    நெறிநிற்பார்யாரேநிகழ்த்தாய்பராபரமே. - (250)

    அந்தக்கரணமெனுமாகாதபேய்களெனை
    வந்துபிடித்தாட்டவழக்கோபராபரமே. - (251)

    ஐவரொடுங்கூடாமலந்தரங்கசேவைதந்த
    தெய்வவறிவேசிவமேபராபரமே. - (252)

    அருளாகிநின்றசுகமாகாமலையோ
    விருளாகிநிற்கவியல்போபராபரமே. - (253)

    அன்பரெல்லாமின்பமருந்திடவும்யானொருவன்
    றுன்புறுதனன்றோநீசொல்லாய்பராபரமே. - (254)

    சந்ததமுநின்கருணைசாற்றுவதல்லால்வேறு
    சிந்தையறியேனுன்சித்தம்பராபரமே. - (255)

    நானானெனக்குளறுநாட்டத்தாலென்னைவிட்டுப்
    போனாலுமுன்னைவிட்டுப்போகேன்பராபரமே. - (256)

    இக்காயம்பொய்யன்றோரீட்டத்துனக்கபயம்
    புக்காதாருண்டோபுகலாய்பராபரமே. - (257)

    தானாதல்பூரணமேசாருமிடமுண்டுயிரும்
    வானாதியுமொழுங்காய்மன்னும்பராபரமே. - (258)

    உன்னுமனங்கர்ப்பூரவுண்டைபோலேகரைய
    மின்னுமானந்தவிளக்கேபராபரமே. - (259)

    நாட்பட்டலைந்தநடுக்கமெலாந்தீரவுனக்
    காட்பட்டுந்துன்பமெனக்காமோபராபரமே. - (260)

    பாவிபடுங்கண்கலக்கம்பார்த்துமிரங்காதிருந்தா
    லாவிக்குறுதுணையாரையாபராபரமே. - (261)

    நின்னிறைவேதாரகமாய்நின்றுசுகமெய்தாம
    லென்னிறைவேபாவித்தேனென்னேபராபரமே. - (262)

    நின்னைச்சரண்புகுந்தானீகாக்கல்வேண்டுமல்லா
    லென்னைப்புறம்விடுதலென்னேபராபரமே. - (263)

    மாறாததுன்பமெல்லாம்வந்துரைத்தானின்செவியி
    லேறாதவாறேதியம்பாய்பராபரமே. - (264)

    விஞ்சுபுலப்பாடனைத்தும்வீறுதுன்பஞ்செய்யவந்த
    வஞ்சுபுலவேடருக்குமாற்றேன்பராபரமே. - (265)

    கன்னங்கரியநிறக்காமாதிராக்ஷசப்பேய்க்
    கென்னையிலக்காகவைத்ததென்னேபராபரமே. - (266)

    சித்திநெறிகேட்டல்செகமயக்கஞ்சன்மமற
    முத்திநெறிகேட்டன்முறைகாண்பராபரமே. - (267)

    சிந்தைசிதையச்சிதையாதவானந்த
    மெந்தவகையாலேவந்தெய்தும்பராபரமே. - (268)

    கூர்த்தவறிவாலறியக்கூடாதெனக்குரவன்
    தேர்த்தபடிதானேதிரிந்தேன்பராபரமே. - (269)

    பத்தரருந்தும்பரமசுகம்யானருந்த
    வெத்தனைநாள்செல்லுமியம்பாய்பராபரமே. - (270)

    தீரத்தினாற்றுறவுசேராமலிவ்வுலகிற்
    பாரத்தனம்பேசல்பண்போபராபரமே. - (271)

    இந்தவெளியினையுண்டேப்பமிடப்பேரறிவாத்
    தந்தவெளிக்கேவெளியாய்ச்சார்ந்தேன்பராபரமே.- (272)

    உணர்த்துமுனைநாடாதுணர்ந்தவையேநாடி
    யிணக்குறுமென்னேழமைதானென்னேபராபரமே.- (273)

    உண்டுபோலின்றாமுலகைத்திரமெனவுட்
    கொண்டுநான்பெற்றபலன்கூறாய்பராபரமே. - (274)

    உள்ளபடியாதுமெனவுற்றுணர்ந்தேனக்கணமே
    கள்ளமனம்போனவழிகாணேன்பராபரமே. - (275)

    சித்தமவுனஞ்செயல்வாக்கெலாமவுனஞ்
    சுத்தமவுனமென்பாற்றோன்றிற்பராபரமே. - (276)

    எண்ணில்பலகோடியுயிரெத்தனையோவத்தனைக்குங்
    கண்ணிற்கலந்தவருட்கண்ணேபராபரமே. - (277)

    எனக்கினியாருன்போலுமில்லையென்றால்யானு
    முனக்கினியானாகாவுளவேன்பராபரமே. - (278)

    அண்டபிண்டங்காணேனகமும்புறமுமொன்றாக்
    கண்டவென்னைநீகலந்தகாலம்பராபரமே. - (279)

    எத்தனையோகோடியெடுத்தெடுத்துச்சொன்னாலுஞ்
    சித்தமிரங்கிலையென்செய்வேன்பராபரமே. - (280)

    அன்றந்தநால்வருக்குமற்புதமாநீயுரைத்த
    தொன்றந்தவார்த்தையெனக்குண்டோபராபரமே. - (281)

    அப்பனென்றுமன்னையென்றுமாரியனென்றும்முனை
    யே,செப்புவதுமுன்னிலையின்சீர்காண்பராபரமே. - (282)

    கட்டுங்கனமுமந்தக்காலர்வரும்போதெதிர்த்து
    வெட்டுந்தளமோவிளம்பாய்பராபரமே. - (283)

    பேசாதமோனநிலைபெற்றன்றோநின்னருளாம்
    வாசரமகோசரந்தான்வாய்க்கும்பராபரமே. - (284)

    கற்றாலுங்கேட்டாலுங்காயமழியாதசித்தி
    பெற்றாலுமின்பமுண்டோபேசாய்பராபரமே. - (285)

    கண்டவடிவெல்லாங்கரைக்கின்றவஞ்சனம்போ
    லண்டமெல்லாநின்னருளேயன்றோபராபரமே. - (286)

    தன்செயலாலொன்றுமிலைதானென்றானான்பாவி
    நின்செயலாய்நில்லாநினைவேன்பராபரமே. - (287)

    கொலைகளவுகட்காமங்கோபம்விட்டாலன்றோ
    மலையிலக்காநின்னருடான்வாய்க்கும்பராபரமே. - (288)

    தன்னையறியாதுசகந்தானாயிருந்துவிட்டா
    லுன்னையறியவருளுண்டோபராபரமே. - (289)

    ஒன்றிரண்டென்றுன்னாவுணர்வுகொடுத்துள்ளபடி
    யென்றுமென்னைவையாயிறையேபராபரமே. - (290)

    கருதுமடியார்களுளங்காணவெளியாகுந்
    துரியநிறைவானசுகமேபராபரமே. - (291)

    பொய்குவித்தநெஞ்சனருட்பொற்பறிந்துதிக்கனைத்
    துங்,கைகுவித்துநிற்பதெந்தக்காலம்பராபரமே. - (292)

    அத்துவிதமானவயிக்யவனுபவமே
    சுத்தநிலையந்நிலையார்சொல்வார்பராபரமே. - (293)

    வைத்தசுவரலம்பின்மண்போமோமாயையினோர்க்
    கெத்தனைபோதித்துமென்னாமெந்தாய்பராபரமே. - (294)

    பூட்டற்றுத்தேகமற்றுப்போகுமுன்னேநின்னருளைக்
    காட்டத்தகாதோவென்கண்ணேபராபரமே. - (295)

    சொல்லிற்பதர்களைந்துசொன்முடிவுகாணாதார்
    நெல்லிற்பதர்போலநிற்பார்பராபரமே. - (296)

    அழுக்காற்றானெஞ்சமழுங்கியபுன்மாக்க
    ளிழுக்காற்றாலின்பநலமெய்தார்பராபரமே. - (297)

    தேகாதிபொய்யெனவேதேர்ந்தவுபசாந்தருக்கு
    மோகாதியுண்டோமொழியாய்பராபரமே. - (298)

    சாதனையெல்லாமவிழத்தற்போதங்காட்டாதோர்
    போதனைநீநல்குவதெப்போதோபராபரமே. - (299)

    ஒன்றுமறியாவிருளாமுள்ளம்படைத்தவெனக்
    கென்றுகதிவருவதெந்தாய்பராபரமே. - (300)

    சிந்திக்குந்தோறுமென்னுட்சிற்சுகமாயூற்றூறிப்
    புந்திக்குணின்றவருட்பொற்பேபராபரமே - (301)

    என்றுமடைந்தோர்கட்கிரங்கார்குறிப்பனைத்துங்
    கன்றையுதைகாலிகதைகாண்பராபரமே. - (302)

    குற்றங்குறையக்குணமேலிடவருளை
    யுற்றவரேயாவிக்குறவாம்பராபரமே. - (303)

    ஓருரையால்வாய்க்குமுண்மைக்கோரனந்தநூல்கோடி
    ப்,பேருரையாற்பேசிலென்னபேராம்பராபரமே. - (304)

    சொல்லுஞ்சமயநெறிச்சுற்றுக்குளேசுழலு
    மல்லலொழிவதென்றைக்கையாபராபரமே. - (305)

    பிடித்ததையேஸ்தாபிக்கும்பேராணவத்தை
    யடித்துத்துரத்தவல்லாரார்காண்பராபரமே. - (306)

    நேசத்தானின்னைநினைக்குநினைவுடையார்
    ஆசைக்கடலிலழுந்தார்பராபரமே. - (307)

    கள்ளாதுகட்டுணவுங்காரியமோநானொருசொல்
    கொள்ளாததோஷமன்றோகூறாய்பராபரமே - (308)

    சென்றவிடமெல்லாந்திருவருளேதாரகமா
    நின்றவர்க்கேயானந்தநிட்டைபராபரமே. - (309)

    நீட்சிகுறுகலில்லாநித்தியசுகாரம்பசக
    சாக்ஷியாமுன்னைவந்துசார்ந்தேன்பராபரமே. - (310)

    வானாதிதத்துவமாய்மன்னிநின்றகாரணநீ
    நானாகிநிற்பதெந்தநாளோபராபரமே. - (311)

    காட்டத்திலங்கிகடையவந்தாலென்னவுன்னும்
    நாட்டத்தினூடுவந்தநட்பேபராபரமே. - (312)

    நித்திரையாய்த்தானேநினைவயர்ந்தானித்தநித்தம்
    செத்தபிழைப்பானதெங்கள்செய்கைபராபரமே. - (313)

    இன்பநிட்டையெய்தாமல்யாதெனினுஞ்சென்றுமனம்
    துன்புறுதல்வன்பிறவித்துக்கம்பராபரமே. - (314)

    பொய்யகலமெய்யானபோதநிலைகண்டோர்க்கோ
    ரையமிலையையமிலையையாபராபரமே. - (315)

    மந்திரத்தையுன்னிமயங்காதெனக்கினியோர்
    தந்திரத்தைவைக்கத்தகாதோபராபரமே. - (316)

    வின்கருணைபூத்ததென்னமேவியுயிர்க்குயிராய்த்
    தண்கருணைதோன்றவருடாய்நீபராபரமே - (317)

    தன்மயமாய்நின்றநிலைதானேதானாகிநின்றா
    னின்மயமாயெல்லாநிகழும்பராபரமே. - (318)

    ஏங்கியிடையுநெஞ்சவேழையைநீவாவென்றே
    பாங்குபெறச்செய்வதுன்மேற்பாரம்பராபரமே. - (319)

    ஆண்டநின்னைநீங்காவடிமைகள்யாமாணவத்தைப்
    பூண்டதென்னகன்மம்புகலாய்பராபரமே. - (320)

    எங்கணுநீயென்றாலிருந்தபடியெய்தாம
    லங்குமிங்குமென்றலையலாமோபராபரமே. - (321)

    கற்குமதுவுண்டுகளித்ததல்லானின்னருளி
    னிற்குமதுதந்ததுண்டோநீதான்பராபரமே. - (322)

    அண்டபகிரண்டமறியாதநின்வடிவைக்
    கண்டவரைக்கண்டாற்கதியாம்பராபரமே. - (323)

    கலக்கமுறநெஞ்சைக்கலக்கித்திரும்பத்
    துலக்குபவனீயலையோசொல்லாய்பராபரமே. - (324)

    சிந்தையுமென்போலச்செயலற்றடங்கிவிட்டால்
    வந்ததெலாநின்செயலாவாழ்வேன்பராபரமே. - (325)

    பந்தமெலாந்தீரப்பரஞ்சோதிநீகுருவாய்
    வந்தவடிவைமறவேன்பராபரமே. - (326)

    தானந்தமானசகசநிருவிகற்ப
    வானந்தநிட்டையருளையாபராபரமே. (327)

    அல்லலெல்லாந்தீரவெனக்கானந்தமாகவொரு
    சொல்லையென்பால்வைத்ததையென் தொல்வேன்பராபரமே. (328)

    சிந்தைமயக்கமறச்சின்மயமாய்நின்றவுன்னைத்
    தந்தவுனக்கென்னையுநான்றந்தேன்பராபரமே. (329)

    மைகாட்டுமாயைமயக்கமறநீகுருவாய்க்
    கைகாட்டவுங்கனவுகண்டேன்பராபரமே. (330)

    மால்வைத்தசிந்தைமயக்கறவென்சென்னிமிசைக்
    கால்வைக்கவுங்கனவுகண்டேன்பராபரமே.- (331)

    மண்ணானமாயையெல்லாமாண்டுவெளியாகவிரு
    கண்ணாரவுங்கனவுகண்டேன்பராபரமே. - (332)

    மண்ணீர்மையாலேமயங்காதுன்கையாலென்
    கண்ணீர்துடைக்கவுநான்கண்டேன்பராபரமே.(333)

    உள்ளதுணராவுணர்விலிமாபாவியென்றோ
    மெள்ளமெள்ளக்கைநெகிழவிட்டாய்பராபரமே. (334)

    எல்லாநினதுசெயலென்றெண்ணுமெண்ணமுநீ
    அல்லாலெனக்குளதோவையாபராபரமே. - (335)

    பந்தமயக்கிருக்கப்பற்றொழிந்தேனென்றுளது
    மிந்தமயக்கமெனக்கேன்பராபரமே. (336)

    காட்சியெல்லாங்கண்ணைவிடக் கண்டதுண்டோயாதினுக்கு,
    மாட்சியுனதருளேயன்றோபராபரமே. - (337)

    எட்டுத்திசையுமொன்றாயின்பமாய்நின்றவுன்னை
    விட்டுப்பிரியவிடம்வேறோபராபரமே. - (338)

    பிறியாதுயிர்க்குயிராய்ப்பின்னமறவோங்குஞ்
    செறிவேயறிவேசிவமேபராபரமே. - (339)

    ஏதேதுசொன்னாலுமெள்ளளவுநீயிரங்காச்
    சூதேதெனக்குளவுசொல்லாய்பராபரமே. - (340)

    கற்பனையாப்பாடுகின்றேன்கண்ணீருங்கம்பலையும்
    சொற்பனத்துங்காணேனென்சொல்வேன்பராபரமே.(341)

    வன்பொன்றுநீங்காமனதிறப்பமாறாப்பேர்
    அன்பொன்றும்போதுமெனக்கையாபராபரமே. - (342)

    ஏதுந்தெரியாவெளியேனைவாவெனநின்
    போதநிலைகாட்டிற்பொறாதோபராபரமே. - (343)

    ஓராமலெல்லாமொழிந்தேற்குன்றெய்வவரு
    டாராதிருக்கத்தகுமோபராபரமே. - (344)

    மோனந்தருஞானமூட்டியெனக்குவட்டா
    வானந்தவாழ்க்கையருளாய்பராபரமே. - (345)

    வாடுமுகங்கண்டென்னைவாடாமலேகாத்த
    நீடுங்கருணைநிறைவேபராபரமே. - (346)

    புந்தியினானின்னடியைப்போற்றுகின்றமெய்யடியார்
    சிந்தையிறப்போநின் றியானம்பராபரமே. - (347)

    உனக்குவமையாக்கருணையுள்ளவரும்வன்மைக்
    கெனக்குவமையானவருமில்லைபராபரமே. - (348)

    தாயிருந்தும்பிள்ளைதளர்ந்தாற்போலெவ்விடத்து
    நீயிருந்துநான்றளர்ந்துநின்றேன்பராபரமே. - (349)

    வாயாற்கிணறுகெட்டவாறேபோல்வாய்பேசிப்
    பேயானார்க்கின்பமுண்டோபேசாய்பராபரமே. - (350)

    பாவமென்றாலேதும்பயமின்றிச்செய்யவிந்தச்
    சீவனுக்கார்போதந்தெரித்தார்பராபரமே. - (351)

    இன்பநிருவிகற்பமின்றேதாவன்றெனிலோ
    துன்பம்பொறுப்பரிதுசொன்னேன்பராபரமே. - (352)

    கற்குநிலைகற்றாற்கருவியலிழாதருளாய்
    நிற்குநிலைகற்பதுவேநீதம்பராபரமே. - (353)

    காச்சச்சுடர்விடும்பொற்கட்டிபோனின்மலமாய்ப்
    பேச்சற்றவரேபிறவார்பராபரமே. - (354)

    பற்றொழிந்துசிந்தைப்பதைப்பொழிந்துதானேதா
    னற்றிருப்பதென்றைக்கமைப்பாய்பராபரமே. - (355)

    உருவெளிதான்வாதவூருத்தமர்க்கல்லாலினமுங்
    குருவழிநின்றார்க்குமுண்டோகூறாய்பராபரமே. - (356)

    தேகமியாதேனுமொருசித்திபெறச்சீவன்முத்தி
    யாகுநெறிநல்லநெறியையாபராபரமே. - (357)

    உலகநெறிபோற்சடலமோயவுயிர்முத்தி
    யிலகுமெனல்பந்தவியல்போபராபரமே. - (358)

    பரமாப்பரவெளியாப்பார்ப்பதல்லான்மற்றெவர்க்குந்
    திரமேதுமில்லைநன்றாத்தேர்ந்தேன்பராபரமே. - (359)

    தேடுவேனின்னருளைத்தேடுமுன்னேயெய்தினட
    மாடுவேனானந்தமாவேன்பராபரமே. - (360)

    உள்ளங்குழையவுடல்குழையவுள்ளிருந்த
    கள்ளங்குழையவென்றுகாண்பேன்பராபரமே. - (361)

    பட்டப்பகற்போலப்பாழ்த்தசிந்தைமாளினெல்லாம்
    வெட்டவெளியாகவிளங்கும்பராபரமே. - (362)

    பார்க்கினணுபோற்கிடந்தபாழ்ஞ்சிந்தைமாளினென்னை,
    யார்க்குச்சரியிடலாமையாபராபரமே. - (363)

    பாட்டுக்கோவன்பினுக்கோபத்திக்கோவன்பர்தங்க
    ணீட்டுக்கெல்லாங்குறுகிநின்றாய்பராபரமே. - (364)

    முத்தாந்தவித்தேமுளைக்குநிலமாயெழுந்த
    சித்தாந்தமார்க்கச்சிறப்பேபராபரமே - (365)

    உன்னாவெளியாயுறங்காதபேருணர்வா
    யென்னாவிக்குள்ளேயிருந்தாய்பராபரமே. - (366)

    தத்துவமெல்லாமகன்றதன்மையர்க்குச்சின்மயமா
    நித்தமுத்தசுத்தநிறைவேபராபரமே. - (367)

    உள்ளக்கொதிப்பகலவுள்ளுள்ளேயானந்த
    வெள்ளமலர்க்கருணைவேண்டும்பராபரமே. - (368)

    என்னைப்புரப்பதருளின்கடனாமென்கடனா
    நின்னிற்பணியரவேநிற்கைபராபரமே. - (369)

    தானேயாநன்னிலையைத்தந்தவருளானந்த
    வானேமனாதீதவாழ்வேபராபரமே. - (370)

    மண்ணாதிபூதமெல்லாம்வைத்திருந்தநின்னிறைவைக்
    கண்ணாரக்கண்டுகளித்தேன்பராபரமே. - (371)

    அறியாமையீதென்றறிவித்தவன்றேதான்
    பிறியாவருணிலையும்பெற்றேன்பராபரமே. - (372)

    தீதெனவுநன்றெனவுந்தேர்ந்துநான்றேர்ந்தபடி
    யேதுநடக்கவொட்டாதென்னேபராபரமே. - (373)

    கண்டவறிவகண்டாகாரமெனமெய்யறிவிற்
    கொண்டவர்க்கேமுத்திகொடுப்பாய்பராபரமே. - (374)

    ஈறாகவல்வினைநானென்னாமலின்பசுகம்
    பேறாம்படிக்கடிமைபெற்றேன்பராபரமே. - (375)

    பெற்றாரனுபூதிபேசாதமோனநிலை
    கற்றாருனைப்பிரியார்கண்டாய்பராபரமே. - (376)

    நீயேநானென்றுநினைப்புமறப்புமறத்
    தாயேயனையவருடந்தாய்பராபரமே. - (377)

    சஞ்சலமற்றெல்லாநீதானென்றுணர்ந்தேனென்
    னஞ்சலியுங்கொள்ளாயரசேபராபரமே. - (378)

    பூதமுதனாதவனாபொய்யென்றமெய்யரெல்லாங்
    காதலித்தவின்பக்கடலேபராபரமே. - (379)

    வாக்குமனமொன்றுபட்ட வார்த்தையல்லால்வெவ்
    வேறாய்ப்,போக்குடையவார்த்தை பொருந்தேன்பராபரமே. - (380)

    வன்மையின்றியெல்லா மதித்துணர்வாய்க்காகெடுவேன்
    றன்மையொன்றுந்தோயாத்தடையோபராபரமே. - (381)

    பத்தர்சித்தர்வாழிபரிபக்குவர்கள்வாழிசெங்கோல்
    வைத்தவர்கள்வாழிகுருவாழிபராபரமே. - (382)

    கல்லாதேனானாலுங்கற்றுணர்ந்தமெய்யடியார்
    சொல்லாலேநின்னைத்தொடர்ந்தேன்பராபரமே. - (383)

    சொல்லிறப்பச்சற்குருவாய்த் தோன்றிச்சுகங்கொடுத்த
    நல்லுரைக்கேகொத்தடிமைநான்காண்பராபரமே. - (384)

    முத்திக்குவித்தானமோனக்கரும்புவழி
    தித்தித்திடவிளைந்தேனேபராபரமே. - (385)

    நித்திரையும்பாழ்த்தநினைவுமற்றுநிற்பதுவோ
    சுத்தவருணிலைநீசொல்லாய்பராபரமே. - (386)

    மண்ணுமறிகடலுமற்றுளவுமெல்லாமுன்
    கண்ணிலிருக்கவுநான்கண்டேன்பராபரமே. - (387)

    பூட்டிவைத்துவஞ்சப்பொறிவழியேயென்றனைநீ
    யாட்டுகின்றதேதோவறியேன்பராபரமே. - (388)

    பொய்யுணர்வாயிந்தப்புழுக்கூட்டைக்காத்திருந்தே
    யுய்யும்வகையுமுளதோபராபரமே. - (389)

    -------------

    44. பைங்கிளிக்கண்ணி


    அந்தமுடனாதியளவாமலென்னறிவிற்
    சுந்தரவான்சோதிதுலங்குமோபைங்கிளியே. - (1)

    அகமேவுமண்ணலுக்கென்னல்லலெல்லாஞ்சொல்லிச்
    சுகமானநீபோய்ச்சுகங்கொடுவாபைங்கிளியே. - (2)

    ஆவிக்குளாவியெனுமற்புதனார்சிற்சுகந்தான்
    பாவிக்குங்கிட்டுமோசொல்லாய்நீபைங்கிளியே. - (3)

    ஆருமறியாமலெனையந்தரங்கமாகவந்து
    சேரும்படியிறைக்குச்செப்பிவாபைங்கிளியே. - (4)

    ஆறானகண்ணீர்க்கென்னங்கபங்கமானதையுங்
    கூறாததென்னோகுதலைமொழிப்பைங்கிளியே. - (5)

    இன்பருளவாடையழுக்கேறுமெமக்கண்ணல்சுத்த
    வம்பரமாமாடையளிப்பானோபைங்கிளியே. - (6)

    உன்னாமலொன்றிரண்டென்றோராமல்வீட்டுநெறி
    சொன்னான்வரவும்வகைசொல்லாய்நீபைங்கிளியே. - (7)

    ஊருமிலார்பேருமிலாருற்றார்பெற்றாருடனே
    யாருமிலாரென்னையறிவாரோபைங்கிளியே. - (8)

    ஊரைப்பாராமலெனக்குள்ளகத்துநாயகனார்
    சீரைப்பார்த்தாற்கருணைசெய்வாரோபைங்கிளியே. - (9)

    என்றுவிடியுமிறைவாவோவென்றன்று
    நின்றநிலையெல்லாநிகழ்த்தாய்நீபைங்கிளியே. - (10)

    எந்தமடலூடுமெழுதாவிறைவடிவைச்
    சிந்தைமடலாவெழுதிச்சேர்ப்பேனோபைங்கிளியே. - (11)

    கண்ணுண்மணிபோலின்பங்காட்டியெனைப்பிரிந்த
    திண்ணியருமின்னம்வந்துசேர்வாரோபைங்கிளியே. - (12)

    ஏடார்மலர்சூடேனெம்பெருமான்பொன்னடியாம்
    வாடாமலர்முடிக்குவாய்க்குமோபைங்கிளியே. - (13)

    கல்லேன்மலரேன்கனிந்தவன்பேபூசையென்ற
    நல்லோர்பொல்லாவெனையுநாடுவரோபைங்கிளியே.- (14)

    கண்டதனைக்கண்டுகலக்கந்தவிரெனவே
    விண்டபெருமானையுநான்மேவுவனோபைங்கிளியே.- (15)

    காணாதகாட்சிகருத்துவந்துகாணாமல்
    வீணாள்கழித்துமெலிவேனோபைங்கிளியே. - (16)

    காந்தமிரும்பைக்கவர்ந்திழுத்தாலென்னவருள்
    வேந்தனெமையிழுத்துமேவுவனோபைங்கிளியே. - (17)

    காதலால்வாடினதுங்கண்டனையேயெம்மிறைவர்
    போதரவாயின்பம்புசிப்பேனோபைங்கிளியே. - (18)

    கிட்டிக்கொண்டன்பருண்மைகேளாப்பலவடிகொள்
    பட்டிக்குமின்பமுண்டோசொல்லாய்நீபைங்கிளியே. - (19)

    கிட்டூராய்நெஞ்சிற்கிளவார்தழுவவென்றா
    னெட்டூரராவரவர்நேசமென்னோபைங்கிளியே. - (20)

    கூறுங்குணமுமில்லாக்கொள்கையினாரென்கவலை
    யாறும்படிக்குமணைவாரோபைங்கிளியே. - (21)

    சின்னஞ்சிறியேன்றன்சிந்தைகவர்ந்தாரிறைவர்
    தன்னந்தனியேதவிப்பேனோபைங்கிளியே. - (22)

    சிந்தைமருளைத்தெளிவித்தெனையாள
    வந்தகுருநாதனருள்வாய்க்குமோபைங்கிளியே. - (23)

    சொல்லிறந்துநின்றசுகரூபப்பெம்மானை
    யல்லும்பகலுமணைவேனோபைங்கிளியே. - (24)

    தற்போதத்தாலேதலைகீழதாகவைய
    னற்போதவின்புவரநாட்செலுமோபைங்கிளியே. - (25)

    தன்னையறியுந்தருணந்தனிற்றலைவ
    ரென்னையணையாதவண்ண மெங்கொளித்தார்பைங்கிளியே. (26)

    தாங்கரியமையலெல்லாந் தந்தெனைவிட்டின்னருளா
    ம், பாங்கியைச்சேர்ந்தாரிறைக்குப்பண்போசொல்பை
    ங்கிளியே. - (27)

    தாவியதோர்மர்க்கடமாந்தன்மைவிட்டேயண்ணலிடத்
    தோவியம்போனிற்கினெனையுள்குவரோ பைங்கிளியே. - (28)

    தீராக்கருவழக்கைத்தீர்வையிட்டங்கென்னையினிப்
    பாரேறாதாண்டானைப்பற்றுவனோபைங்கிளியே. - (29)

    தூங்கிவிழித்தென்னபலன்றூங்காமற்றூங்கிநிற்கும்
    பாங்குசண்டாலன்றோபலன்காண்பேன்பைங்கிளியே. - (30)

    தொல்லைக்கவலைதொலைத்துத்தொலையாத
    வெல்லையிலாவின்பமயமெய்துவனோபைங்கிளியே. - (31)

    நன்னெஞ்சத்தன்பரெல்லாநாதரைச்சேர்ந்தின்பணை
    ந்தார், வன்னெஞ்சத்தாலேநான்வாழ்விழந்தேன்பைங்
    கிளியே. - (32)

    நானேகருதின்வரநாடார்சும்மாவிருந்தாற்
    றானேயணைவரவர்தன்மையென்னோபைங்கிளியே. - (33)

    நீர்க்குமிழிபோன்றவுடனிற்கையிலேசாசுவதஞ்
    சேர்க்கவறியாமற்றிகைப்பேனோபைங்கிளியே. - (34)

    நெஞ்சகத்தில்வாழ்வார்நினைக்கின்வேறென்றணையார்
    வஞ்சகத்தாரல்லரவர்மார்க்கமென்னோபைங்கிளியே. - (35)

    பன்முத்திரைச்சமயம்பாழ்படக்கல்லாலடிவாழ்
    சின்முத்திரையரசைச்சேர்வேனோபைங்கிளியே. - (36)

    பச்சைகண்டநாட்டிற்பறகுமுனைப்போற்பறந்தே
    னிச்சையெல்லாமண்ணற்கியம்பிவாபைங்கிளியே - (37)

    பாசபந்தஞ்செய்ததுன்பம்பாராமலெம்மிறைவ
    ராசைதந்ததுன்பமதற்காற்றேனான்பைங்கிளியே. - (38)

    பாராசையற்றிறையைப்பற்றற்றநான்பற்றிநின்ற
    பூராயமெல்லாம்புகன்றுவாபைங்கிளியே - (39)

    பேதைப்பருவத்தேபின்றொடர்ந்தென்பக்குவமுஞ்
    சோதித்தவண்ணல்வந்துதோய்வாரோபைங்கிளியே. - (40)

    பைம்பயிரைநாடுமுன்போற்பார்பூத்தபைங்கொடிசேர்
    செம்பயிரைநாடித்திகைதேனான்பைங்கிளியே. - (41)

    பொய்க்கூடுகொண்டுபுலம்புவேனோவெம்மிறைவர்
    மெய்க்கூடுசென்றுவிளம்பிவாபைங்கிளியே. - (42)

    பொய்ப்பிணிவேண்டேனைப்பொருட்படுத்தியண்ணலென்பான்,
    மெய்ப்பணியுந்தந்தொருகான்மேவுவனோபைங்கிளியே. - (43)

    மண்ணுறங்கும்விண்ணுறங்கு மற்றுமுளவெலாமுறங்குங்
    கண்ணுறங்கேனெம்மிறைவர்காதலாற்பைங்கிளியே.- (44)

    மட்டுப்படாதமயக்கமெல்லாந்தீரவென்னை
    வெட்டவெளிவீட்டி லண்ணன்மேவுவனோ பைங்கிளியே.- (45)

    மாலைவளர்த்தென்னைவளர்த்திறைவர்பன்னெறியாம்
    பாலைவனத்தில்விட்டபாவமென்னோபைங்கிளியே.- (46)

    மெய்யினோய்மாற்றவுழ்தமெத்தவுண்டெம்மண்ணறந்த
    மையனோய்தீர்க்கமருந்துமுண்டோபைங்கிளியே.- (47)

    மேவுபஞ்சவண்ணமுற்றாய்வீண்சிறையாலல்லலுற்றாய்
    பாவிபஞ்சவண்ணம்பகர்ந்துவாபைங்கிளியே.- (48)

    வாய்திறவாவண்ணமெனைவைத்தாண்டார்க்கென்றுயரை,
    நீதிறவாச்சொல்லினிசமாங்காண்பைங்கிளியே.- (49)

    வாட்டப்படாதமவுனவின்பங்கையாலே
    காட்டிகொடுத்தானைகாண்பேனோபைங்கிளியே. (50)

    வாராவரவாகவந்தருளுமோனருக்கென்
    பேராசையெல்லாம்போய்ப்பேசிவாபைங்கிளியே. - (51)

    விண்ணவர்தம்பாலமுதம் வேப்பங்காயாகவென்பாற்,
    பண்ணியதெம்மண்ணன்மயல் பார்த்தாயோபைங்கிளியே. - (52)

    விண்ணுள்வளியடங்கிவேறற்றதென்னவருட்
    கண்ணுளடங்கிடவுங்காண்பேனோபைங்கிளியே. - (53)

    விண்ணார்நிலவுதவழ்மேடையிலெல்லாருமுற
    மண்ணானவீட்டிலென்னை வைத்ததென்னோ பைங்கிளியே. - (54)

    உள்ளத்தினுள்ளேயொளித்திருந்தென் கள்ளமெல்லாம்
    வள்ளலறிந்தாலெனக்குவாயுமுண்டோபைங்கிளியே. - (55)

    ஆகத்தைநீக்குமுன்னேயாவித்துணைவரைநான்
    றாகத்தின்வண்ணந்தழுவுவனோபைங்கிளியே. - (56)

    தானேசுபாவந்தலைப்படநின்றான்ஞான
    வானானவரும்வருவாரோபைங்கிளியே. - (57)

    கள்ளத்தலைவரவர்கைகாட்டிப்பேசாம
    லுள்ளத்தில்வந்தவுபாயமென்னோபைங்கிளியோ. - (58)

    --------------

    45. எந்நாட்கண்ணி

    1. தெய்வவணக்கம்.

    நீர்பூத்தவேணிநிலவெறிப்பமன்றாடுங்
    கார்பூத்தகண்டனையான்காணுநாளெந்நாளோ. - (1)

    பொன்னாருமன்றுண்மணிப்பூவைவிழிவண்டுசுற்று
    மென்னாரமுதினலமிச்சிப்பதெந்நாளோ. - (2)

    நீக்கிமலக்கட்டறுத்துநேரேவெளியிலெம்மைத்
    தூக்கிவைக்குந்தாளைத்தொழுதிடுநாளெந்நாளோ. - (3)

    கருமுகங்காட்டாமலென்றுங்கர்ப்பூரம்வீசுந்
    திருமுகமேநோக்கித்திருக்கறுப்பதெந்நாளோ. - (4)

    வெஞ்சேலெனும்விழியார்வேட்கைநஞ்சுக்கஞ்சினரை
    யஞ்சேலெனுங்கைக்கபயமென்பதெந்நாளோ. - (5)

    ஆறுசமயத்துமதுவதுவாய்நின்றிலங்கும
    வீறுபரைதிருத்தாண்மேவுநாளெந்நாளோ. - (6)

    பச்சைநிறமாய்ச்சிவந்தபாகங்கலந்துலகை
    யிச்சையுடனீன்றாளையாங்காண்பதெந்நாளோ - (7)

    ஆதியந்தங்காட்டாதகண்டிதமாய்நின்றுணர்த்தும்
    போதவடிவானடியைப்போற்றுநாளெந்நாளோ. - (8)

    கங்கைநிலவுசடைக்காட்டானைத்தந்தையெனும்
    புங்கவெண்கோட்டானைபதம்புந்திவைப்பதெந்நாளோ. - (9)

    அஞ்சுமுகங்காட்டாமலாறுமுகங்காட்டவந்த
    செஞ்சரணச்சேவடியைச் சிந்தைவைப்பதெந்நாளோ. - (10)

    தந்தையிருதாடுணித்துத்தம்பிரான்றாள்சேர்ந்த
    வெந்தையிருதாளிணைக்கேயின்புறுவதெந்நாளோ - (11)

    2. குருமரபின்வணக்கம்.

    துய்யகரமலராற்சொல்லாமற்சொன்னவுண்மை
    யையனைக்கல்லாலரசையாமணவதெந்நாளோ. - (1)

    சிந்தையினுக்கெட்டாதசிற்சுகத்தைக்காட்டவல்ல
    நந்தியடிக்கீழ்க்குடியாய்நாமணைவதெந்நாளோ. - (2)

    ஏந்தைசனற்குமரனாதியெமையாட்கொள்வான்
    வந்ததலத்தினரைவாழ்த்துநாளெந்நாளோ - (3)

    பொய்கண்டார்காணாப்புனிதமெனுமத்துவித
    மெய்கண்டநாதனருண்மேவுநாளெந்நாளோ. - (4)

    பாதிவிருத்தத்தாலிப்பார்விருத்தமாகவுண்மை
    சாதித்தார்பொன்னடியைத்தான்பணிவதெந்நாளோ. - (5)

    சிற்றம்பலமன்னுஞ்சின்மயராந்தில்லைநகர்க்
    கொற்றங்குடிமுதலைக்கூறுநாளெந்நாளோ. - (6)

    குறைவிலருண்ஞானமுதல்கொற்றங்குடியடிக
    ணறைமலர்த்தாட்கன்புபெற்று நாமிருப்பதெந்நாளோ.- (7)

    நாளவங்கள்போகாமனன்னெறியைக்காட்டியெமை
    யாளவந்தகோலங்கட்கன்புவைப்பதெந்நாளோ. - (8)

    என்னறிவையுள்ளடக்கியென்போல்வருமவுனி
    தன்னறிவுக்குள்ளேநான்சாருநாளெந்நாளோ. - (9)

    ஆறுளொன்றைநாடினதற் காறுமுண்டாமென்றெமக்கு
    க், கூறுமவுனியருள்கூடுநாளெந்நாளோ. - (10)

    நில்லாமனின்றருளைநேரேபாரென்றவொரு
    சொல்லான்மவுனியருடோற்றுநாளெந்நாளோ. - (11)

    வைதிகமாஞ்சைவமவுனிமவுனத்தளித்த
    மெய்திகழ்ந்தென்னல்லல்விடியுநாளெந்நாளோ. - (12)

    வாக்குமனமற்றமவுனிமவுனத்தருளே
    தாக்கவுமென்னல்லலெல்லாந் தட்டழிவதெந்நாளோ. - (13)


    3. அடியார்வணக்கம்.

    வெம்பந்தந்தீர்த்துலகாள்வேந்தன்றிருஞான
    சம்பந்தனையருளாற்சாருநாளெந்நாளோ. - (1)

    ஏரின்சிவபோகமிங்கிவர்க்கேயென்னவுழ
    வாரங்கொள் செங்கையர்தாள் வாரம்வைப்ப தெந்நாளோ. - (2)

    பித்தரிறையென்றறிந்துபேதைபாற்றூதனுப்பு
    வித்ததமிழ்ச்சமர்த்தர்மெய்புகழ்வதெந்நாளோ. - (3)

    போதவூர்நாடறியப்புத்தர்தமைவாதில்வென்ற
    வாதவூரையனன்பைவாஞ்சிப்பதெந்நாளோ. - (4)

    ஒட்டுடன்பற்றின்றியுலகைத்துறந்தசெல்வப்
    பட்டினத்தார்பத்ரகிரிபண்புணர்வதெந்நாளோ. - (5)

    கண்டதுபொய்யென்றகண்டாகாரசிவமெய்யெனவே
    விண்டசிவவாக்கியர்தாண்மேவுநாளெந்நாளோ. - (6)

    சக்கரவர்த்திதவராசயோகியெனு
    மிக்கதிருமூலனருண்மேவுநாளெந்நாளோ. - (7)

    கந்தரனூபூதிபெற்றுக்கந்தரனுபூதிசொன்ன
    வெந்தையருணாடியிருக்குநாளெந்நாளோ. - (8)

    எண்ணரியசித்தரிமையோர்முதலான
    பண்ணவர்கள்பத்தரருள்பாலிப்பதெந்நாளோ. - (9)


    4. யாக்கையைப்பழித்தல்.

    சுக்கிலமுநீருஞ்சொரிமலமுநாறுமுடற்
    புக்குழலும்வாஞ்சையினிப் போதுமென்பதெந்நாளோ.- (1)

    நீர்க்குமிழிபூணமைத்துநின்றாலுநில்லாமெய்
    பார்க்குமிடத்திதன்மேற்பற்றறுவதெந்நாளோ. - (2)

    காக்கைநரிசெந்நாய்கழுகொருநாள்கூடியுண்டு
    தேக்குவிருந்தாமுடலைச்சீயென்பதெந்நாளோ. - (3)

    செங்கிருமியாதிசெனித்தசென்மபூமியினை
    யிங்கெனுடலென்னுமிழுக்கொழிவதெந்நாளோ. - (4)

    தத்துவர்தொண்ணூற்றறுவர் தாமாய்வாழிந்நாட்டைப்
    பித்தநானென்னும்பிதற்றொழிவதெந்நாளோ. - (5)

    ஊனொன்றிநாதனுணர்த்துமதைவிட்டறிவே
    னானென்றபாவிதலைநாணுநாளெந்நாளோ. - (6)

    வேலையிலர்வேதன்விதித்தவிந்த்ரசாலவுடன்
    மாலைவியாபாரமயக்கொழிவதெந்நாளோ. - (7)

    ஆழ்ந்துநினைக்கினரோசிகமாமிவ்வுடலில்
    வாழ்ந்துபெறும்பேற்றைமதிக்குநாளெந்நாளோ. - (8)

    மும்மலச்சேறானமுழுக்கும்பிபாகமெனு
    மிம்மலகாயத்துளிகழ்ச்சிவைப்பதெந்நாளோ. - (9)

    நாற்றமிகக்காட்டுநவவாயில்பெற்றபசுஞ்
    சோற்றுத்துருத்திசுமையென்பதெந்நாளோ. - (10)

    உருவிருப்பவுள்ளேதானூறுமலக்கேணி
    யருவருப்புவாழ்க்கையைக்கண்டஞ்சுநாளெந்நாளோ. - (11)


    5. மாதரைப்பழித்தல்.

    மெய்வீசுநாற்றமெல்லாமிக்கமஞ்சளான்மறைத்துப்
    பொய்வீசும்வாயார்புலையொழிவதெந்நாளோ. - (1)

    திண்ணியநெஞ்சப்பறவைசிக்கக்குழற்காட்டிற்
    கண்ணிவைப்போர்மாயங்கடக்குநாளெந்நாளோ. - (2)

    கண்டுமொழிபேசிமனங்கண்டுகொண்டுகைவிலையாக்
    கொண்டுவிடுமானார்பொய்க் கூத்தொழிவதெந்நாளோ. - (3)

    காமனைவாவென்றிருண்டகண்வலையைவீசுமின்னார்
    நாமமறந்தருளைநண்ணுநாளெந்நாளோ. - (4)

    கண்களில்வெண்பூளைகரப்பக்கருமையிட்ட
    பெண்கண்மயறப்பிப்பிழைக்குநாளெந்நாளோ. - (5)

    வீங்கித்தளர்ந்துவிழுமுலையார்மேல்வீழ்ந்து
    தூங்குமதன்சோம்பைத்துடைக்குநாளெந்நாளோ. - (6)

    கச்சிருக்குங்கொங்கைகரும்பிருக்குமின்மாற்றம்
    வைச்சிருக்குமாதர்மயக்கொழிவதெந்நாளோ. - (7)

    பச்சென்றகொங்கைப்பசப்பியர்பாழானமய
    னச்சென்றறிந்தருளைநண்ணுநாளெந்நாளோ. - (8)

    உந்திச்சுழியாலுளத்தைச்சுழித்தகன
    தந்தித்தனத்தார்தமைமறப்பதெந்நாளோ. - (9)

    தட்டுவைத்தசேலைகொய்சகத்திற்சிந்தையெல்லாங்
    கட்டிவைக்குமாயமின்னார்கட்டழிவதெந்நாளோ. - (10)

    ஆழாழியென்னவளவுபடாவஞ்சநெஞ்சப்
    பாழானமாதர்மயற்பற்றொழிவதெந்நாளோ. - (11)

    தூயபனித்திங்கள்சுடுவதெனப்பித்தேற்று
    மாயமடவார்மய்க்கொழிவதெந்நாளோ.- (12)

    ஏழைக்குறும்புசெயுமேந்திழையார்மோகமெனுங்
    பாழைக்கடந்துபயிராவதெந்நாளோ.- (13)

    விண்டுமொழிகுளறிவேட்கைமதுமொண்டுதருந்
    தொண்டியர்கள்கட்கடையிற்சுற்றொழிவதெந்நாளோ.- (14)

    மெய்யிற்சிவம்பிறக்கமேவுமின்பம்போன்மாதர்
    பொய்யிலின்பின்றென்றுபொருந்தாநாளெந்நாளோ.- (15)


    6. தத்துவமுறைமை.

    ஐம்பூதத்தாலேயலக்கழிந்ததொஷமற
    வெம்பூதநாதனருளெய்துநாளெந்நாளோ. - (1)

    சத்தமுதலாம்புலனிற்சஞ்சரித்தகள்வரெனும்
    பித்தர்பயந்தீர்ந்துபிழைக்குநாளெந்நாளோ. - (2)

    நாளும்பொறிவழியைநாடாதவண்ணமெமை
    யாளும்பொறியாலருள்வருவதெந்நாளோ. - (3)

    வாக்காதியானகன்மமாயைதம்பால்வீண்காலம்
    போக்காமலுண்மைபொருந்துநாளெந்நாளோ. - (4)

    மனமானவானரக்கைம்மாலையாகாம
    லெனையாளடிகளடியெய்துநாளெந்நாளோ. - (5)

    வேட்டைப்புலப்புலையர்மேவாதவண்ணமனக்
    காட்டைத்திருத்திக்கரைகாண்பதெந்நாளோ.- (6)

    உந்துபிறப்பிறப்பையுற்றுவிடாதெந்தையருள்
    வந்துபிறக்கமனமிறப்பதெந்நாளோ.- (7)

    புத்தியெனுந்துத்திப்பொறியரவின்வாய்த்தேரை
    யொத்துவிடாதெந்தையருளோங்குநாளெந்நாளோ.- (8)

    ஆங்காரமென்னுமதயானைவாயிற்கரும்பா
    யேங்காமலெந்தையருளெய்துநாளெந்நாளோ.- (9)

    சித்தமெனும்பெளவத்திரைக்கடலில்வாழ்துரும்பாய்
    நித்தமலையாதருளினிற்குநாளெந்நாளோ.- (10)

    வித்தியாதத்துவங்களேழும்வெருண்டோடச்
    சுத்தபரபோகத்தைத்துய்க்குநாளெந்நாளோ.- (11)

    சுத்தவித்தையேமுதலாத் தோன்றுமோரைந்துவகைத்
    தத்துவத்தைநீங்கியருள்சாருநாளெந்நாளோ.- (12)

    பொல்லாதகாமப்புலைத்தொழிலிலென்னறிவு
    சொல்லாமனன்னெறியிற்சேருநாளெந்நாளோ.- (13)

    அடிகளடிக்கீழ்க்குடியாயாம்வாழாவண்ணங்
    குடிகெடுக்கும்பாழ்மடிமைக்கூறொழிவதெந்நாளோ.- (14)

    ஆனபுறக்கருவியாறுபத்துமற்றுளவும்
    போனவழியுங்கூடப்புன்முளைப்பதெந்நாளோ.- (15)

    அந்தகனுக்கெங்குமிருளானவாறாவறிவில்
    வந்தவிருள்வேலைவடியுநாளெந்நாளோ.- (16)

    புன்மலத்தைச்சேர்ந்துமலபோதம்பொருந்துதல்போய்
    நின்மலத்தைச்சேர்ந்துமலநீங்குநாளெந்நாளோ. - (17)

    கண்டுகண்டுந்தேறாக்கலக்கமெல்லாந்தீர்வண்ணம்
    பண்டைவினைவேரைப்பறிக்குநாளெந்நாளோ. - (18)

    பைங்கூழ்வினைதான்படுசாவியாகவெமக்
    கெங்கோன்கிரணவெயிலெய்துநாளெந்நாளோ. - (19)

    குறித்தவிதமாதியாற்கூடும்வினையெல்லாம்
    வறுத்தவித்தாம்வண்ணமருள்வந்திடுநாளெந்நாளோ. - (20)

    சஞ்சிதமேயாதிசரக்கானமுச்சேரும்
    வெந்தபொறியாகவருண்மேவுநாளெந்நாளோ. - (21)

    தேகமுதனான்காத்திரண்டொன்றாய்நின்றிலகு
    மோகமிகுமாயைமுடியுநாளெந்நாளோ. - (22)

    சத்தமுதலாத்தழைத்திங்கெமக்குணர்த்துஞ்
    சுத்தமாமாயைதொடக்கறுவதெந்நாளோ. - (23)

    எம்மைவினையையிறையையெம்பாற்காட்டாத
    வம்மைதிரோதையகலுநாளெந்நாளோ. - (24)

    நித்திரையாய்வந்துநினைவழிக்குங்கேவலமாஞ்
    சத்துருவைவெல்லுஞ்சமர்த்தறிவதெந்நாளோ. - (25)

    சன்னல்பின்னலானசகலமெனுங்குப்பையிடை
    முன்னவன்ஞானக்கனலைமூட்டுநாளெந்நாளோ. - (26)

    மாயாவிகாரமலமொழிசுத்தாவத்தை
    தோயாவருளைத்தொடருநாளெந்நாளோ. - (27)


    7. தன்னுண்மை.

    உடம்பறியுமென்னுமந்தவூழலெல்லாந்தீரத்
    திடம்பெறவேயெம்மைத்தெரிசிப்பதெந்நாளோ. - (1)

    செம்மையறிவாலறிந்துதேகாதிக்குள்ளிசைந்த
    யெம்மைப்புலப்படவேயாமறிவதெந்நாளோ. - (2)

    தத்துவமாம்பாழ்த்தசடவுருவைத்தான்சுமந்த
    சித்துருவாமெம்மைத்தெரிசிப்பதெந்நாளோ. - (3)

    பஞ்சப்பொறியையுயிரென்னுமந்தப்பஞ்சமறச்
    செஞ்செவேயெம்மைத்தெரிசிப்பதெந்நாளோ. - (4)

    அந்தக்கரணமுயிராமென்றவந்தரங்க
    சிந்தைக்கணத்திலெம்மைத்தேர்ந்தறிவதெந்நாளோ. - (5)

    முக்குணத்தைச்சீவனென்னுமூடத்தைவிட்டருளா
    லக்கணமேயெம்மையறிந்துகொள்வதெந்நாளோ. - (6)

    காலையுயிரென்னுங்கலாதிகள்சொற்கேளாமற்
    சீலமுடனெம்மைத்தெளிந்துகொள்வதெந்நாளோ. - (7)

    வான்கெடுத்துத்தேடுமதிகேடர்போலவெமை
    நான்கெடுத்துத்தேடாமனன்கறிவதெந்நாளோ. - (8)


    8. அருளியல்பு.

    ஈனந்தருநாடிதுநமக்குவேண்டாமென்
    றானந்தநாட்டிலவதரிப்பதெந்நாளோ. - (1)

    பொய்க்காட்சியானபுவனத்தைவிட்டருளா
    மெய்க்காட்சியாம்புவனமேவுநாளெந்நாளோ. - (2)

    ஆதியந்தங்காட்டாமலம்பரம்போலேநிறைந்த
    தீதிலருட்கடலைச்சேருநாளெந்நாளோ. - (3)

    எட்டுத்திசைக்கீழ்மேலெங்கும்பெருகிவரும்
    வெட்டவெளிவிண்ணாற்றின்மெய்தோய்வதெந்நாளோ. (4)

    சூதானமென்றுசுருதியெல்லாமோலமிடு
    மீதானமானவெற்பைமேவுநாளெந்நாளோ. - (5)

    வெந்துவெடிக்கின்றசிந்தைவெப்பகலத்தண்ணருளாய்
    வந்துபொழிகின்றமழைகாண்பதெந்நாளோ. - (6)

    சூரியர்கள்சந்திரர்கடோன்றாச்சொயஞ்சோதிப்
    பூரணதேயத்திற்பொருந்துநாளெந்நாளோ. - (7)

    கன்றுமனவெப்பக்கலக்கமெலாந்தீரவருட்
    டென்றல்வந்துவீசுவெளிசேருநாளெந்நாளோ. - (8)

    கட்டுநமன்செங்கோல்கடாவடிக்குங்கோலாக
    வெட்டவெளிப்பொருளைமேவுநாளெந்நாளோ. - (9)

    சாலக்கபாடத்தடைதீரவெம்பெருமா
    னோலக்கமண்டபத்துளோடுநாளெந்நாளோ. - (10)

    விண்ணவன்றானென்னும்விரிநிலாமண்டபத்தில்
    தண்ணீரருந்தித்தளர்வொழிவதெந்நாளோ. - (11)

    வெய்யபுவிபார்த்துவிழித்திருந்தவல்லலறத்
    துய்யவருளிற்றுயிலுநாளெந்நாளோ. - (12)

    வெய்யபிறவிவெயில்வெப்பமெலாம்விட்டகல
    வையனடிநீழலணையுநாளெந்நாளோ. - (13)

    வாதைப்பிறவிவளைகடலைநீந்தவையன்
    பாதப்புணையிணையைப்பற்றுநாளெந்நாளோ. - (14)

    ஈனமில்லாமெய்ப்பொருளையிம்மையிலேகாணவெளி
    ஞானமெனுமஞ்சனத்தைநான்பெறுவதெந்நாளோ. - (15)

    எல்லாமிறந்தவிடத்தெந்தைநிறைவாம்வடிவைப்
    புல்லாமற்புல்லிப்புணருநாளெந்நாளோ. - (16)

    சடத்துளுயிர்போலெமக்குத்தானுயிராய்ஞான
    நடத்துமுறைகண்டுபணிநாம்விடுவதெந்நாளோ. - (17)

    எக்கணுமாந்துன்பவிருட்கடலைவிட்டருளாம்
    மிக்ககரையேறிவெளிப்படுவதெந்நாளோ. - (18)


    9. பொருளியல்பு.

    கைவிளக்கின்பின்னேபோய்க்காண்பார்போன்மெ
    ய்ஞ்ஞான், மெய்விளக்கின்பின்னேபோய்மெய்காண்ப
    தெந்நாளோ. - (1)

    கேடில்பசுபாசமெல்லாங்கீழ்ப்படவுந்தானேமே
    லாடுஞ்சுகப்பொருளுக்கன்புறுவதெந்நாளோ. - (2)

    ஆண்வத்தைநீக்கியறிவூடேயைவகையாக்
    காணவத்தைக்கப்பாலைக்காணுநாளெந்நாளோ. - (3)

    நீக்கப்பிரியாநினைக்கமறக்கக்கூடாப்
    போக்குவரவற்றபொருளணைவதெந்நாளோ. - (4)

    அண்டருக்குமெய்ப்பில்வைப்பாமாரமுதையென்ன
    கத்திற், கண்டுகொண்டுநின்றுகளிக்குநாளெந்நாளோ. - (5)

    காட்டுந்திருவருளேகண்ணாகக்கண்டுபர
    வீட்டின்பமெய்ப்பொருளைமேவுநாளெந்நாளோ. - (6)

    நானானதன்மைநழுவியேயெவ்வுயிர்க்குந்
    தானானவுண்மைதனைச்சாருநாளெந்நாளோ. - (7)

    சிந்தைமறந்துதிருவருளாய்நிற்பவர்பால்
    வந்தபொருளெம்மையுந்தான்வாழ்விப்பதெந்நாளோ- (8)

    எள்ளுக்குளெண்ணைபோலெங்கும்வியாபகமா
    யுள்ளவொன்றையுள்ளபடியோருநாளெந்நாளோ - (9)

    அருவுருவமெல்லாமகன்றதுவாயான
    பொருளெமக்குவந்துபுலப்படுவதெந்நாளோ. - (10)

    ஆரணமுங்காணாவகண்டிதாகாரபரி
    பூரணம்வந்தெம்மைப்பொருந்துநாளெந்நாளோ. - (11)

    சத்தொடுசித்தாகித்தயங்கியவானந்தபரி
    சுத்தவகண்டசிவந்தோன்றுநாளெந்நாளோ - (12)

    எங்கெங்கும்பார்த்தாலுமின்புருவாய்நீக்கமின்றித்
    தங்குந்தனிப்பொருளைச்சாருநாளெந்நாளோ. - (13)

    அடிமுடிகாட்டாதசுத்தவம்பரமாஞ்சோதிக்
    கடுவெளிவந்தென்னைக்கலக்குநாளெந்நாளோ. - (14)

    ஒன்றனையுங்காட்டாவுளத்திருளைச்சூறையிட்டு
    நின்றபரஞ்சோதியுடனிற்குநாளெந்நாளோ - (15)

    எந்தச்சமயமிசைந்துமறிவூடறிவாய்
    வந்தபொருளேபொருளாவாஞ்சிப்பதெந்நாளோ. - (16)

    எவ்வாறிங்குற்றுணர்ந்தார்யாவரவர்தமக்கே
    யவ்வாறாய்நின்றபொருட்கன்புவைப்பதெந்நாளோ. - (17)

    பெண்ணாணலியெனவும்பேசாமலென்னறிவின்
    கண்ணூடேநின்றவொன்றைக்காணுநாளெந்நாளோ. - (18)

    நினைப்புமறப்புமறநின்றபரஞ்சோதி
    தனைப்புலமாவென்னறிவிற்சந்திப்பதெந்நாளோ. - (19)


    10. ஆனந்தவியல்பு.

    பேச்சுமூச்சில்லாதபேரின்பவெள்ளமுற்று
    நீச்சுநிலைகாணாமனிற்குநாளெந்நாளோ. - (1)

    சித்தந்தெளிந்தோர்தெளிவிற்றெளிவான
    சுத்தசுகக்கடலுட்டோயுநாளெந்நாளோ. - (2)

    சிற்றின்பமுண்டூழ்சிதையவனந்தங்கடல்போன்
    முற்றின்பவெள்ளமெமைமூடுநாளெந்நாளோ. - (3)

    எல்லையில்பேரின்பமயமெப்படியென்றோர்தமக்குச்
    சொல்லறியாவூமர்கள்போற்சொல்லுநாளெந்நாளோ. - (4)

    அண்டரண்டகோடியனைத்துமுகாந்தவெள்ளங்
    கொண்டதெனப்பேரின்பங்கூடுநாளெந்நாளோ. - (5)

    ஆதியந்தமில்லாதவாதியனாதியெனுஞ்
    சோதியின்பத்தூடேதுளையுநாளெந்நாளோ. - (6)

    சாலோகமாதிசவுக்கியமும்விட்டநம்பான்
    மேலானஞானவின்பமேவுநாளெந்நாளோ. - (7)

    தற்பரத்தினுள்ளேயுஞ்சாலோகமாதியெனும்
    பொற்பறிந்தானந்தம்பொருந்துநாளெந்நாளோ. - (8)

    உள்ளத்தினுள்ளேதானூறுஞ்சிவானந்த
    வெள்ளந்துளைந்துவிடாய்தீர்வதெந்நாளோ. - (9)

    கன்னலுடன்முக்கனியுங்கற்கண்டுஞ்சீனியுமாய்
    மன்னுமின்பவாரமுதைவாய்மடுப்பதெந்நாளோ. - (10)

    மண்ணூடுழன்றமயக்கமெல்லாந்தீர்ந்திடவும்
    விண்ணூடெழுந்தசுகமேவுநாளெந்நாளோ. - (11)

    கானற்சலம்போன்றகட்டுழலைப்பொய்தீர
    வானமுதவாவிமருவுநாளெந்நாளோ. - (12)

    தீங்கரும்பென்றாலினியாதின்றாலினிப்பனபோற்
    பாங்குறும்பேடின்பம்படைக்குநாளெந்நாளோ. - (13)

    புண்ணியபாவங்கள்பொருந்தாமெய்யன்பரெல்லா
    நண்ணியபேரின்பசுகநாமணைவதெந்நாளோ. - (14)


    11. அன்புநிலைமை.

    தக்கரவிகண்டசரொருகம்போலென்னிதய
    மிக்கவருள்கண்டுவிகசிப்பதெந்நாளோ. - (1)

    வானமுகில்கண்டமயூரபக்ஷிபோலவையன்
    ஞானநடங்கண்டுநடிக்குநாளெந்நாளோ. - (2)

    சந்திரனைநாடுஞ்சகோரபக்ஷிபோலறிவில்
    வந்தபரஞ்சோதியையாம்வாஞ்சிப்பதெந்நாளோ. - (3)

    சூத்திரமெய்ப்புற்றகத்துக்குண்டலிப்பாம் பொன்றாட்டுஞ்
    சித்தனையென் கண்ணாற்றெரிசிப்பதெந்நாளோ. - (4)

    அந்தரத்தேநின்றாடுமானந்தக்கூத்தனுக்கென்
    சிந்தைதிறைகொடுத்துச்சேவிப்பதெந்நாளோ - (5)

    கள்ளனிவனென்றுமெள்ளக்கைவிடுதல்காரியமோ
    வள்ளலேயென்றுவருந்துநாளெந்நாளோ - (6)

    விண்ணாடர்காணாவிமலாபரஞ்சோதி
    யண்ணாவாவாவென்றரற்றுநாளெந்நாளோ - (7)

    ஏதேதுசெய்தாலுமென்பணிபோய்நின்பணியா
    மாதேவாவென்றுவருந்துநாளெந்நாளோ - (8)

    பண்டுங்காணேனான்பழம்பொருளெயின்றுமுனைக்
    கண்டுங்காணேனெனவுங்கைகுவிப்பதெந்நாளோ - (9)

    பொங்கேதமானபுழுக்கமெல்லாந்தீரவின்ப
    மெங்கேயெங்கேயென்றிரங்குநாளெந்நாளோ - (10)

    கடலின்மடைகண்டதுபோற்கண்ணீராறாக
    வுடல்வெதும்பிமூர்ச்சித்துருகுநாளெந்நாளோ - (11)

    புலர்ந்தேன்முகஞ்சருகாய்போனேனிற்காண
    வலர்ந்தேனென்றேங்கியழுங்குநாளெந்நாளோ - (12)

    புண்ணீர்மையாளர்புலம்புமாபோற்புலம்பிக்
    கண்ணீருங்கம்பலையுங்காட்டுநாளெந்நாளோ - (13)

    போற்றேனென்றாலுமென்னைப்புந்திசெய்யும்வேதனைக்கிங்
    காற்றேனாற்றேனென்றரற்றுநாளெந்நாளோ - (14)

    பொய்முடங்கும்பூமிசிலபோட்டலறப்பூங்கமலன்
    கைமுடங்கநான்சனனக்கட்டறுவதெந்நாளோ. - (15)

    கற்குணத்தைப்போன்றவஞ்சக்காரர்கள்கைகோவாம
    னற்குணத்தார்கைகோத்துநான்றிரிவதெந்நாளோ. - (16)

    துட்டனைமாமாயைச்சுழனீக்கியந்தரமே
    விட்டனையோவென்றுவியக்குநாளெந்நாளோ. - (17)


    12. அன்பர்நெறி.

    அத்துவாவெல்லாமடங்கச்சோதித்தபடிச்
    சித்துருவாய்நின்றார்தெளிவறிவதெந்நாளோ. - (1)

    மூச்சற்றுச்சிந்தைமுயற்சியற்றுமூதறிவாய்ப், பேச்ச
    ற்றோர்பெற்றவொன்றைப்பெற்றிடுநாளெந்நாளோ. - (2)

    கோட்டாலையானகுணமிறந்தநிர்க்குணத்தோர்
    தேட்டாலேதேடுபொருள்சேருநாளெந்நாளோ. - (3)

    கெடுத்தேபசுத்துவத்தைக்கேடிலாவானந்த
    மடுத்தோரடுத்தபொருட்கார்வம்வைப்பதெந்நாளோ. - (4)

    கற்கண்டாலோடுகின்றகாக்கைபோற்பொய்ம்மாயச்
    சொற்கண்டாலோடுமன்பர்தோய்வறிவதெந்நாளோ. - (5)

    மெய்த்தகுலங்கல்விபுனைவேடமெல்லாமோடவிட்ட
    சித்தரொன்றுஞ்சேராச்செயலறிவதெந்நாளோ. - (6)

    குற்றச்சமயக்குறும்படர்ந்துதற்போத
    மற்றவர்கட்கற்றபொருட்கன்புவைப்பதெந்நாளோ. - (7)

    தர்க்கமிட்டுப்பாழாஞ்சமயக்குதர்க்கம்விட்டு
    நிற்குமவர்கண்டவழிநேர்பெறுவதெந்நாளோ. - (8)

    வீறியவேதாந்தமுதன்மிக்ககாலாந்தவரை
    யாறுமுணர்ந்தோருணர்வுக்கன்புவைப்பதெந்நாளோ. - (9)

    கண்டவிடமெல்லாங்கடவுண்மயமென்றறிந்து,கொ
    ண்டநெஞ்சர்நேயநெஞ்சிற்கொண்டிருப்பதெந்நாளோ. - (10)

    பாக்கியங்களெல்லாம்பழுத்துமனம்பழுத்தோர்
    நோக்குந்திக்கூத்தைநோக்குநாளெந்நாளோ. - (11)

    எவ்வுயிருந்தன்னுயிர்போலெண்ணுந்தபோதனர்கள்
    செவ்வறிவைநாடிமிகச்சிந்தைவைப்பதெந்நாளோ. - (12)


    13. அறிஞருரை.

    இருநிலனாய்த்தீயாகியென்றதிருப்பாட்டின்
    பெருநிலையைக்கண்டணைந்துபேச்சறுவதெந்நாளோ. - (1)

    அற்றவர்கட்கற்றசிவனாமென்றவத்துவித
    முற்றுமொழிகண்டருளின்மூழ்குநாளெந்நாளோ. - (2)

    தானென்னைமுன்படைத்தானென்றதகவுரையை
    நானென்னாவுண்மைபெற்றுநாமுணர்வதெந்நாளோ. - (3)

    என்னுடையதோழனுமாயென்றதிருப்பாட்டி
    னன்னெறியைக்கண்டுரிமைநாஞ் செய்வதெந்நாளோ. - (4)

    ஆருடனேசேருமறிவென்றவவ்வுரையைத்
    தேரும்படிக்கருடான்சேருநாளெந்நாளோ. - (5)

    உன்னில்உன்னும் என்ற உறுமொழியால் என்னிதயந்
    தன்னில்உன்னி நன்னெறியைச் சாருநாள் எந்நாளோ. - (6)

    நினைப்பறவே தான்நினைந்தேன் என்றநிலை நாடி
    அனைத்துமாம் அப்பொருளில் ஆழுநாள் எந்நாளோ.(7)

    சென்றுசென் றேயணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாகி
    நின்றுவிடும் என்றநெறி நிற்குநாள் எந்நாளோ. (8)

    ஆதியந்த மில்லா அரியபரஞ் சோதிஎன்ற
    நீதிமொழி கண்டதுவாய் நிற்குநாள் எந்நாளோ. (9)

    பிறிதொன்றி லாசையின்றிப் பெற்றிருந்தேன் என்ற
    நெறியுடையான் சொல்லில்நிலை நிற்குநாள் எந்நாளோ. (10)

    திரையற்ற நீர்போல் தெளியஎனத் தேர்ந்த
    உரைபற்றி உற்றங்கு ஒடுங்குநாள் எந்நாளோ. 11.


    14. நிற்குநிலை

    பண்ணின் இசைபோலப் பரமன்பால் நின்றதிறன் எண்ணி அருளாகி இருக்குநாள் எந்நாளோ. - (1)
    அறிவோடறியாமையற்றறிவினூடே
    குறியிலறிவுவந்துகூடுநாளெந்நாளோ. - (2)

    சொல்லான்மனத்தாற்றொடராச்சம்பூரணத்தி
    னில்லாநிலையாய்நிலைநிற்பதெந்நாளோ. - (3)

    செங்கதிரின்முன்மதியந்தேசடங்கிநின்றிடல்போ
    லங்கணனார்தாளிலடங்குநாளெந்நாளோ. - (4)

    வானூடடங்கும்வளிபோலவின்புருவாங்
    கோனூடடங்குங்குறிப்பறிவதெந்நாளோ. - (5)

    செப்பரியதன்கருணைச்சிற்சுகனார்பூரணத்தி
    லப்பினிடையுப்பாயணையுநாளெந்நாளோ. - (6)

    தூயவறிவானசுகரூபசோதிதன்பாற்
    றீயினிரும்பென்னத்திகழுநாளெந்நாளோ. - (7)

    தீதிணையாக்கர்ப்பூரதீபமெனநானகண்ட
    சோதியுடனொன்றித்துரிசறுவதெந்நாளோ. - (8)

    ஆராருங்காணாதவற்புதனார்பொற்படிக்கீழ்
    நீரார்நிழல்போனிலாவுநாளெந்நாளோ. - (9)

    எட்டத்தொலையாதவெந்தைபிரான்சந்நிதியில்
    பட்டப்பகல்விளக்காய்ப்பண்புறுவதெந்நாளோ. - (10)

    கருப்புவட்டைவாய்மடுத்துக்கண்டார்நாப்போல
    விருப்புவட்டாவின்புருவைமேவுநாளெந்நாளோ. - (11)

    துச்சப்புலனாற்சுழலாமற்றண்ணருளா
    லுச்சிக்கதிர்ப்படிகமொவ்வுநாளெந்நாளோ. - (12)

    இம்மாநிலத்திலிருந்தபடியேயிருந்து
    சும்மாவருளைத்தொடருநாளெந்நாளோ. - (13)

    தானவனாந்தன்மையெய்தித் தண்டமெனவண்டமெங்கு,
    ஞானமதயானைநடத்துநாளெந்நாளோ. - (14)

    ஒன்றிரண்டுமில்லதுவாயொன்றிரண்டுமுள்ளதுவாய்
    நின்றசமத்துநிலைநேர்பெறுவதெந்நாளோ. - (15)

    பாசமகலாமற்பதியிற்கலவாமன்
    மாசில்சமத்துமுத்திவாய்க்குநாளெந்நாளோ. - (16)

    சிற்றறிவுமெள்ளச்சிதைந்தெம்மான்பேரறிவை
    யுற்றறியாவண்ணமறிந்தோங்குநாளெந்நாளோ. - (17)

    தந்திரத்தைமந்திரத்தைச்சாரினவையாமறிவென்
    றெந்தையுணர்வேவடிவாவெய்துநாளெந்நாளோ. - (18)

    போக்குவரவற்றவெளிபோனிறைந்தபோதநிலை
    நீக்கமறக்கூடிநினைப்பறுவதெந்நாளோ. - (19)

    காண்பானுங்காட்டுவதுங்காட்சியுமாய்நின்றவந்த
    வீண்பாவம்போயதுவாய்மேவுநாளெந்நாளோ. - (20)

    வாடாதேநானாவாய்மாயாதேயெங்கோவை
    நாடாதேநாடிநலம்பெறுவதெந்நாளோ. - (21)

    ஆடலையேகாட்டியெமதாடலொழித்தாண்டான்பொற்
    றாடலைமேற்சூடித்தழைக்குநாளெந்நாளோ. - (22)

    மேலோடுகீழில்லாதவித்தகனார்தம்முடனே
    பாலொடுநீர்போற்கலந்துபண்புறுவதெந்நாளோ. - (23)

    அறியாதறிந்தெமையாளண்ணலைநாமாகக்
    குறியாதவண்ணங்குறிக்குநாளெந்நாளோ. - (24)

    ஓராமன்மந்திரமுமுன்னாமனம்பரனைப்
    பாராமற்பார்த்துப்பழகுநாளெந்நாளோ. - (25)

    ஊன்பற்றுமென்னோடுறவுபற்றும்பூரணன்பால்
    வான்பற்றுங்கண்போன்மருவுநாளெந்நாளோ.- (26)

    ஆண்டான்மவுனியளித்தவறிவாலறிவைத்
    தூண்டாமற்றூண்டித்துலங்குநாளெந்நாளோ. - (27)

    ஆணவத்தோடத்துவிதமானபடிமெய்ஞ்ஞானத்
    தாணுவினோடத்துவிதஞ்சாருநாளெந்நாளோ.- (28)


    15. நிலைபிரிந்தோர் கூடுதற்குபாயம்.

    கன்மநெறிதப்பிற்கடுநரகென்றெந்நாளு
    நன்மைதருஞானநெறிநாமணைவதெந்நாளோ.- (1)

    ஞானநெறிதானேநழுவிடினுமுப்பதத்து
    ளானமுத்திநல்குமெனவன்புறுவதெந்நாளோ. - (2)

    பன்மார்க்கமானபலவடிபட்டேனுமொரு
    சொன்மார்க்கங்கண்டுதுலங்குநாளெந்நாளோ. - (3)

    அத்துவிதமென்றவனனியச்சொற்கண்டுணர்ந்து
    சுத்தசிவத்தைத்தொடருநாளெந்நாளோ. - (4)

    கேட்டன்முதனான்காலேகேடிலாநாற்பதமும்
    வாட்டமறவெமக்குவாய்க்குநாளெந்நாளோ. - (5)

    என்னதியானென்பதறவெவ்விடமுமென்னாசான்
    சன்னிதியாக்கண்டுநிட்டைசாதிப்பதெந்நாளோ. - (6)

    நாம்பிரமமென்றானடுவேயொன்றுண்டாமா
    றேம்பியெல்லாமொன்றாய்த்திகழுநாளெந்நாளோ. - (7)

    முச்சகமேயாதிமுழுதுமகண்டாகார
    சச்சிதானந்தசிவந்தானென்பதெந்நாளோ. - (8)

    எவ்வடிவும்பூரணமாமெந்தையுருவென்றிசைந்த
    வவ்வடிவுக்குள்ளேயடங்குநாளெந்நாளோ. - (9)

    சிந்தித்ததெல்லாஞ்சிவபூரணமாக
    வந்தித்துவாழ்த்திவணங்குநாளெந்நாளோ. - (10)

    தாங்கியபார்விண்ணாதிதானேஞானாக்கினியா
    யோங்குமியோகவுணர்வுற்றிடுநாளெந்நாளோ. - (11)

    ஆசனமூர்த்தங்களறவகண்டாகாரசிவ
    பூசைசெயவாசைபொருந்துநாளெந்நாளோ. - (12)

    அஞ்செழுத்தினுண்மையதுவானவப்பொருளை
    நெஞ்சழுத்தியொன்றாகிநிற்குநாளெந்நாளோ. - (13)

    அவ்வுயிர்போலெவ்வுயிருமானபிரான்றன்னடிமை
    யெவ்வுயிருமென்றுபணியாஞ்செய்வதெந்நாளோ.- (14)

    தேசிகர்கோனானதிறன்மவுனிநந்தமக்கு
    வாசிகொடுக்கமகிழுநாளெந்நாளோ. - (15)

    குருலிங்கசங்கமமாக்கொண்டதிருமேனி
    ய்ருண்மயமென்றன்புற்றருள்பெறுவதெந்நாளோ. - (16)


    46. காண்பேனோவென்கண்ணி


    சிந்திக்குந்தோறுந்தெவிட்டாவமுதேயென்
    புந்திக்குணீதான்பொருந்திடவுங்காண்பேனோ. - (1)

    கேவலத்தினான்கிடந்துகீழ்ப்படாதின்பவருட்
    காவலன்பாலொன்றிக்கலந்திடவுங்காண்பேனோ. - (2)

    துரியங்கடந்தவொன்றேதூவெளியாய்நின்ற
    பெரியநிறைவேயுனைநான்பெற்றிடவுங்காண்பேனோ. - (3)

    மாசற்றவன்பர்நெஞ்சேமாறாதபெட்டகமாத்
    தேசுற்றமாமணிநின்றேசினையுங்காண்பேனோ. - (4)

    மாயாவிகாரமலமகலவெந்தைபிரா
    னேயானுபூதிநிலைபெறவுங்காண்பேனோ. - (5)

    பொய்யுலகும்பொய்யுறவும்பொய்யுடலும்பொய்யெனவே,
    மெய்யநினைமெய்யெனவேமெய்யுடனேகாண்பேனோ. - (6)

    வாலற்றபட்டமெனமாயாமனப்படலங்
    காலற்றுவீழவுமுக்கண்ணுடையாய்காண்பேனோ. - (7)

    உள்ளும்புறம்புமொருபடித்தாய்நின்றுசுகங்
    கொள்ளும்படிக்கிறைநீகூட்டிடவுங்காண்பேனோ. - (8)

    காட்டுகின்றமுக்கட்கரும்பேகனியேயென்
    னாட்டமெல்லாந்தீரவுனதாடலையுங்காண்பேனோ. - (9)

    தூங்காமற்றூங்கிச்சுகப்பெருமானின்னிறைவி
    னீங்காமனிற்குநிலைபெறவுங்காண்பேனோ. - (10)

    வாதவூராளிதனைவான்கருணையால்விழுங்கும்
    போதவூரேறேநின்பொன்னடியுங்காண்பேனோ. - (11)

    சாட்டையிலாப்பம்பரம்போலாடுஞ்சடசால
    நாட்டமறவெந்தைசுத்தஞானவெளிகாண்பேனோ. - (12)

    மன்றாடும்வாழ்வேமரகதஞ்சேர்மாணிக்கக்
    குன்றேநின்றாட்கீழ்க்குடிபெறவுங்காண்பேனோ. - (13)

    பொய்யென்றறிந்துமெமைப்போகவொட்டாதையவிந்த,
    வையங்கனமயக்கமாற்றிடவுங்காண்பேனோ. - (14)

    தாயினுநல்லதயாளுவேநின்னையுன்னித்
    தீயின்மெழுகொத்துருகுஞ்சிந்தைவரக்காண்பேனோ. - (15)

    என்செயினுமென்பெறினுமென்னிறைவாவேழையன்யா,
    னின்செயலென்றுன்னுநினைவுவரகாண்பேனோ. - (16)

    எள்ளத்தனையுமிரக்கமிலாவன்பாவி
    யுள்ளத்துமெந்தையுலாவிடவுங்காண்பேனோ. - (17)

    வஞ்சகத்துக்காலயமாம்வல்வினையேனாகெடுவே
    னெஞ்சகத்திலையாநீநேர்பெறவுங்காண்பேனோ. - (18)

    தொல்லைப்பிறவித்துயர்கெடவுமெந்தைபிரான்
    மல்லற்கருணைவழங்கிடவுங்காண்பேனோ. - (19)

    வாளாருங்கண்ணார்மயற்கடலிலாழ்ந்தேன்சற்
    றாளாகவெந்தையருள்செயவுங்காண்பேனோ. - (20)

    பஞ்சாய்ப்பறக்குநெஞ்சப்பாவியைநீகூவியையா
    வஞ்சாதேயென்றின்னருள்செயவுங்காண்பேனோ. - (21)

    ஆடுகறங்காதியலமந்துழன்றுமனம்
    வாடுமெனையையாநீவாவெனவுங்காண்பேனோ. - (22)

    சிட்டர்க்கெளியசிவனேயோதீவினையேன்
    மட்டற்றவாசைமயக்கறவுங்காண்பேனோ. - (23)

    உண்ணின்றுணர்த்துமுலப்பிலாவொன்றேநின்
    றண்ணென்றசாந்தவருள்சார்ந்திடவுங்காண்பேனோ. - (24)

    ஓடுங்கருத்தொடுங்கவுள்ளுணர்வுதோன்றநினைக்
    கூடும்படிக்கிறைநீகூட்டிடவுங்காண்பேனோ. - (25)

    வாக்கான்மனத்தான்மதிப்பரியாய்நின்னருளை
    நோக்காமனோக்கிநிற்குநுண்ணறிவுகாண்பேனோ. - (26)

    இவ்வுடம்புநீங்குமுனேயெந்தாய்கேளின்னருளா
    மவ்வுடம்புக்குள்ளேயவதரிக்கக்காண்பேனோ. - (27)

    நித்தமாயொன்றாய்நிரஞ்சனமாய்நிர்க்குணமாஞ்
    சுத்தவெளிநீவெளியாய்த்தோன்றிடவுங் காண்பேனோ. (28)

    கண்ணிறைந்தமோனக்கருத்தேயென்கண்ணேயென்
    னுண்ணிறைந்தமாயையொழிந்திடவுங்காண்பேனோ. - (29)

    அத்தாவிமலாவருளாளாவானந்த
    சித்தாவெனக்குனருள்செய்திடவுங்காண்பேனோ. - (30)

    வீணேபிறந்திறந்துவேசற்றேனாசையறக்
    காணேனிறைநின்கருணைபெறக்காண்பேனோ. - (31)

    சட்டையொத்தவிவ்வுடலைத்தள்ளுமுன்னேநான்சகச
    நிட்டையைப்பெற்றையாநிருவிகற்பங்காண்பேனோ. - (32)

    எல்லாந்தெரியுமிறைவாவென்னல்லலெல்லாஞ்
    சொல்லாமுனீதான்றோகுத்திரங்கக்காண்பேனோ. - (33)

    அண்டபகிரண்டமனைத்துமொருபடித்தாக்
    கண்டவர்கள்கண்டதிருக்காட்சியையுங் காண்பேனோ. - (34)

    ஊனிருந்தகாயமுடனிருப்பவெந்தைநின்பால்
    வானிருந்ததென்னவுநான்வந்திருக்கக்காண்பேனோ.- (35)

    தினையத்தனையுந்தெளிவறியாப்பாவியே
    னினைவிற்பரம்பொருணீநேர்பெறவுங்காண்பேனோ.- (36)

    துன்பமெனுந்திட்டனைத்துஞ்சூறையிடவையாவே
    யின்பவெள்ளம்வந்திங்கெதிர்படவுங்காண்பேனோ.- (37)


    47. ஆகாதோவென்கண்ணி


    கல்லாதநெஞ்சங்கரைந்துருகவெத்தொழிற்கும்
    வல்லாய்நின்னின்பம்வழங்கினாலாகாதோ. - (1)

    என்னையறியவெனக்கறிவாய்நின்றருணின்
    றன்னையறிந்தின்பநலஞ்சாரவைத்தாலாகாதோ. - (2)

    பொய்ம்மயமேயானபுரைதீரவெந்தையின்ப
    மெய்ம்மயம்வந்தென்னைவிழுங்கவைத்தாலாகாதோ- (3)

    மட்டில்லாச்சிற்சுகமாம்வாழ்வேநின்னின்பமயம்
    சிட்டர்போல்யானருந்தித்தேக்கவைத்தாலாகாதோ - (4)

    அத்தாநின்பொற்றாளடிக்கேயனுதினமும்
    பித்தாக்கியின்பம்பெருகவைத்தாலாகாதோ - (5)

    மெல்லியலார்மோகவிழற்கிறைப்பேனையாநின்
    னெல்லையிலானந்தநலமிச்சித்தாலாகாதோ - (6)

    சுட்டழகாயெண்ணுமனஞ்சூறையிட்டானந்தமயக்
    கட்டழகாநின்னைக்கலக்கவைத்தாலாகாதோ. - (7)

    சோதியேநந்தாச்சுகவடிவேதூவெளியே
    ஆதியேநின்னையறியவைத்தாலாகாதோ. - (8)

    நேசஞ்சிறிதுமிலேனின்மலனேநின்னடிக்கே
    வாசஞ்செயவிரங்கிவாவென்றாலாகாதோ. - (9)

    என்னறிவுக்குள்ளேயிருந்ததுபோலையாவே
    நின்னறிவுணின்னுடன்யானிற்கவைத்தாலாகாதோ. - (10)

    ஆதிப்பிரானேயென்னல்லலிருளகலச்
    சோதிப்ரகாசமயங்தோன்றுவித்தாலாகாதோ. - (11)

    ஆசைச்சுழற்கடலிலாழாமலையாநின்
    நேசப்புணைத்தாணிறுத்தினாலாகாதோ. - (12)

    பாசநிகளங்களெல்லாம்பஞ்சாகச்செஞ்செவே
    யீசவெனைவாவென்றிரங்கினாலாகாதோ. - (13)

    ஓயாவுள்ளன்பாயுருகிவாய்விட்டரற்றிச்
    சேயாகியெந்தைநின்னைச்சேரவைத்தாலாகாதோ. - (14)

    ஆதியாம்வாழ்வாயகண்டிதமாய்நின்றபரஞ்
    சோதிநீயென்னைத்தொழும்பனென்றாலாகாதோ. - (15)

    விண்ணாரக்கண்டவிழிபோற்பரஞ்சோதி
    கண்ணாரநின்னிறைவைக்காணவைத்தாலாகாதோ. - (16)

    சேராமற்சேர்ந்துநின்றுசின்மயனேநின்மயத்தைப்
    பாராமற்பாரெனநீபக்ஷம்வைத்தாலாகாதோ. - (17)

    கண்ணாடிபோலவெல்லாங்காட்டுந்திருவருளை
    உண்ணாடியையாவுருகவைத்தாலாகாதோ. - (18)

    மூலவிருள்கால்வாங்கமூதறிவுதோன்றவருட்
    கோலம்வெளியாகவெந்தைகூடுவித்தாலாகாதோ. - (19)

    சாற்றரியவின்பவெள்ளந்தாக்குமதினீமுளைக்கி
    லூற்றமுறுமென்னவதிலுண்மைசொன்னாலாகாதோ. - (20)

    கையுங்குவித்திரண்டுகண்ணருவிபெய்யவரு
    ளைநின்றாட்கீழேயடிமைநின்றாலாகாதோ. - (21)


    48. இல்லையோவென்கண்ணி


    ஏதுந்தெரியாதெனைமறைத்தவல்லிருளை
    நாதநீநீக்கவொருஞானவிளக்கில்லையோ. - (1)

    பணியற்றுநின்றுபதைப்பறவென்கண்ணுண்
    மணியொத்தசோதியின்பவாரியெனக்கில்லையோ. - (2)

    எம்மாலறிவதறவெம்பெருமான்யாதுமின்றிச்
    சும்மாயிருக்கவொருசூத்திரந்தானில்லையோ. - (3)

    நாய்க்குங்கடையானேனாதாநின்னின்பமயம்
    வாய்க்கும்படியினியோர்மந்திரந்தானில்லையோ. - (4)

    ஊனாகநிற்குமுணர்வைமறந்தையாநீ
    தானாகநிற்கவொருதந்திரந்தானில்லையோ. - (5)

    அல்லும்பகலுமகண்டவடிவேயுனைநான்
    புல்லும்படியெனக்கோர்போதனைதானில்லையோ. - (6)


    49. வேண்டாவோவென்கண்ணி


    கண்டவடிவெல்லாநின் காட்சியென்றேகைகுவித்துப்,
    பண்டுமின்றுநின்றவென்னைப் பார்த்திரங்கவேண்டாவோ. - (1)

    வாதனையோடாடுமனப்பாம்புமாயவொரு
    போதனைதந்தையாபுலப்படுத்தவேண்டாவோ. - (2)

    தன்னையறியத்தனியறிவாய்நின்றருளு
    நின்னையறிந்தென்னறிவைநீங்கிநிற்கவேண்டாவோ. - (3)

    அள்ளக்குறையாவகண்டிதானந்தமெனும்
    வெள்ளமெனக்கையாவெளிப்படுத்தவேண்டாவோ. - (4)

    அண்டனேயண்டரமுதேயென்னாரூயிரே
    தொண்டனேற்கின்பந்தொகுத்திரங்கவேண்டாவோ. - (5)

    பாராதேநின்றுடகையாதேசும்மாதான்
    வாராயெனவும்வழிகாட்டவேண்டாவோ. - (6)


    50. நல்லறிவேயென்கண்ணி


    எண்ணிறைந்தமேன்மைபடைத்தெவ்வுயிர்க்குமவ்வு
    யிராய்க், கண்ணிறைந்தசோதியைநாங் காணவாநல்ல
    றிவே. - (1)

    சித்தானநாமென்சடத்தைநாமென்னவென்றுஞ்
    சத்தானவுண்மைதனைச்சாரவாநல்லறிவே. - (2)

    அங்குமிங்குமெங்குநிறையற்புதனார்பொற்பறிந்து
    பங்கயத்துள்வண்டாய்ப்பயன்பெறவாநல்லறிவே. - (3)

    கான்றசோறென்னவிந்தக்காசினிவாழ்வத்தனையும்
    தோன்றவருள்வெளியிற்றோன்றவாநல்லறிவே. - (4)


    51. பலவகைக்கண்ணி.


    என்னரசேகேட்டிலையோவென்செயலோவேதுமிலை
    தன்னரசுநாடாகிதத்துவங்கூத்தாடியதே. - (1)

    பண்டொருகானின்பாற்பழக்கமுண்டோவெந்தைநினை
    க்,கண்டொருகாற்போற்றக்கருத்துங்கருதியதே. - (2)

    வேறு.
    கண்டனவேகாணுமன்றிக்காணாவேகாணாவென்
    கொண்டறிவேனெந்தைநினைக்கூடுங்குறிப்பினையே. - (3)

    கல்லாலடியில்வளர்கற்பகமேயென்னளவோ
    பொல்லாவினைக்குப்பொருத்தந்தான்சொல்லாயே. - (4)

    தப்பிதமொன்றின்றியதுதானாகநிற்கவுண்மை
    செப்பியதுமல்லாலென்சென்னியதுதொட்டனையே. - (5)

    வேறு.
    மாசானநெஞ்சனிவன்வஞ்சனென்றோவாய்திறந்து
    பேசாமௌனம்பெருமான்படைத்ததுவே. - (6)

    கற்பதெல்லாங்கற்றேமுக்கண்ணுடையாய்நின்பணி
    யாய், நிற்பதுகற்றன்றோநிருவிகற்பமாவதுவே. - (7)

    முன்னளவில்கன்மமுயன்றானிவனென்றோ
    வென்னளவிலெந்தாயிரங்காதிருந்ததுவே. - (8)

    வேறு.
    நெஞ்சகம்வேறாகிநினைக்கூடவெண்ணுகின்ற
    வஞ்சகனுக்கின்பமெந்தாய்வாய்க்குமாறெவ்வாறே. - (9)

    வேறு.
    பள்ளங்கடோறும்பரந்தபுனல்போலுலகி
    லுள்ளம்பரந்தாலுடையாயென்செய்வேனே. - (10)

    முன்னினைக்கப்பின்மறைக்குமூடவிருளாகெடுவே
    னென்னினைக்கவென்மறக்கவெந்தைபெருமானே. - (11)

    வல்லாளாமோனாநின்வான்கருணையென்னிடத்தே
    யில்லாதேபோனானானெவ்வண்ணமுய்வேனே. - (12)

    வேறு.
    வாக்குமனமுமவுனமுறவெந்தைநின்னை
    நோக்குமவுனமிந்தநூலறிவிலுண்டாமோ. - (13)

    ஒன்றாய்ப்பலவாயுலகமெங்குந்தானேயாய்
    நின்றாயையாவெனைநீநீங்கற்கெளிதாமோ. - (14)

    ஆவித்துணையேயருமருந்தேயென்றனைநீ
    கூவியழைத்தின்பங்கொடுத்தாற்குறைவாமோ. - (15)

    எத்தனையோநின்விளையாட்டெந்தாய்கேளிவ்வளவென்
    றத்தனையுமென்னாலறியுந்தரமாமோ. - (16)

    தேடுவார்தேடுஞ்சிவனேயோநின்றிருத்தாள்
    கூடுவான்பட்டதுயர்கூறற்கெளிதாமோ. - (17)

    வேறு.
    பற்றினதைப்பற்றுமெந்தாய் பற்றுவிட்டாற்கேவலத்தி
    லுற்றுவிடுநெஞசமுனையொன்றிநிற்பதெப்படியோ. - (18)

    ஒப்பிலாவொன்றேநின்னுண்மையொன்றுங்காட்டாமற்,
    பொய்ப்புவியைமெய்போற் புதுக்கிவைத்ததென்னேயோ. - (19)

    காலால்வழிதடவுங்காலத்தேகண்முளைத்தாற்
    போலேயெனதறிவிற்போந்தறிவாய்நில்லாயோ. - (20)

    தன்னரசுநாடாஞ்சடசாலபூமிமிசை
    யென்னரசேயென்னையிறையாகநாட்டினையோ. - (21)

    வேறு.
    திங்களமுதாநின்றிருவாக்கைவிட்டரசே
    பொங்குவிடமனையபொய்ந்நூல்புலம்புவனோ. - (22)

    உன்னவுன்னவென்னையெடுத்துள்விழுங்குநின்னிறை
    வை, யின்னமின்னங்காணாமலெந்தாய்சுழல்வேனோ. - (23)

    ஆராவமுதனையவானந்தவாரியென்பாற்
    றாராமலையாநீதள்ளிவிடவந்ததென்னோ. - (24)


    52. நின்றநிலை


    நின்றநிலையேநிலையாவைத்தானந்த
    நிலைதானேநிருவிகற்பநிலையுமாகி
    என்றுமழியாதவின்பவெள்ளந்தேக்கி
    இருக்கவெனைத்தொடர்ந்துதொடர்ந்திழுக்குமந்தோ- (1)

    இருக்காதிமறைமுடிவுஞ்சிவாகமாதி
    இதயமுங்கைகாட்டெனவேயிதயத்துள்ளே
    ஒருக்காலேயுணர்ந்தவர்கட்கெக்காலுந்தான்
    ஒழியாதவின்பவெள்ளமுலவாநிற்கும். - (2)

    கற்றதுங்கேட்டதுந்தானேயேதுக்காகக்
    கடபடமென்றுருட்டுதற்கோகல்லாலெம்மான்
    குற்றமறக்கைகாட்டுங்கருத்தைக்கண்டு
    குணங்குறியற்றின்பநிட்டைகூடவன்றோ. - (3)


    53. பாடுகின்றவனுவல்.


    பாடுகின்றபனுவலோர்க, டேடுகின்றசெல்வமே
    நாடுகின்றஞானமன்றி, லாடுகின்றவழகனே. - (1)

    அத்தனென்றநின்னையே, பத்திசெய்துபனுவலால்
    பித்தனின்றுபேசவே, வைத்ததென்னவாரமே. - (2)

    சிந்தையன்புசேரவே, நைந்துநின்னைநாடினேன்
    வந்துவந்துளின்பமே, தந்திரங்குதாணுவே. - (3)

    அண்டரண்டம்யாவுநீ, கொண்டுநின்றகோலமே
    தொண்டர்கண்டுசொரிகணீர், கண்டநெஞ்சுகரையுமே. - (4)

    அன்னைபோலவருண்மிகுந்து, மன்னுஞானவரதனே
    என்னையேயெனக்களித்த, நின்னையானுநினைவனே. - (5)


    54. சங்கர சங்கர சம்பு


    ஆனந்தக்களிப்பு.
    சங்கர சங்கர சம்பு - சிவ சங்கர சங்கர சங்கர சம்பு.

    ஆதியனாதியுமாகி-
    எனக்கானந்தமாயறிவாய்நின்றிலங்குஞ்,
    சோதிமெளனியாய்த்தோன்றி -
    அவன் சொல்லாதவார்த்தையைச் சொன்னாண்டிதோழி - சங்கரசங்கர சம்பு. - (1)

    சொன்னசொல்லேதென்றுசொல்வேன்-
    என்னைச் சூதாய்த்தனிக்கவேசும்மாவிருத்தி
    , முன்னிலை யேதுமில்லாதே-
    சுகமுற்றச்செய்தேயெனைப்பற்றிக்கொண்டாண்டி-
    சங்கர சங்கர சம்பு. - (2)

    பற்றியபற்றறவுள்ளே-
    தன்னைப் பற்றச்சொன்னான்
    பற்றிப்பார்த்தவிடத்தே,பெற்றதையேதென்றுசொல்வேன்-
    சற்றும் பேசாதகாரியம்பேசினான்தோழி-
    சங்கர சங்கர சம்பு.- (3)

    பேசாவிடும்பைகள்பேசிச்-
    சுத்தப் பேயங்கமாகிப்பிதற்றித்திரிந்தேன்,
    ஆசாபிசாசைத்துரத்தி-
    ஐய னடியிணைக்கீழேயடக்கிக்கொண்டாண்டி- சங்கர சங்கரசம்பு. - (4)

    அடக்கிப்புலனைப்பிரித்தே-
    அவனாகிய மேனியிலன்பைவளர்த்தேன்,
    மடக்கிக்கொண்டானென்னைத்தன்னுட்-
    சற்றும் வாய்பேசாவண்ணமரபுஞ்செய்தாண்டி-
    சங்கர சங்கர சம்பு. - (5)

    மரபைக்கெடுத்தனன்கெட்டேன்-
    இத்தை வாய்விட்டுச்சொல்லிடின்வாழ்வெனக்கில்லை,
    கரவுபுருஷனுமல்லன்-
    என்னைக் காக்குந்தலைமைக் கடவுள்காண்மின்னே-
    சங்கர சங்கர சம்பு. - (6)

    கடலின்மடைவிண்டதென்ன-
    இரு கண்களுமானந்தக்கண்ணீர்சொரிய,
    உடலும்புளகிதமாக-
    என துள்ளமுருகவுபாயஞ்செய்தாண்டி-
    சங்கர சங்கர சம்பு. - (7)

    உள்ளதுமில்லதுமாய்முன் -
    னுணர்வதுவாயுன்னுளங்கண்டதெல்லாம்,
    தள்ளெனச்சொல்லியென்னையன்-
    என்னைத்தானாக்கிக்கொண்டசமர்த்தைப்பார்தோழி-
    சங்கர சங்கர சம்பு. - (8)

    பாராதபூதநீயல்லை-
    உன்னிப் பாரிந்திரியங்கரணநீயல்லை,
    வாராயுணர்வுநீயென்றான்-
    ஐய னன்பாயுரைத்தசொல்லானந்தந்தோழி-
    சங்கர சங்கர சம்பு. - (9)

    அன்பருக்கன்பானமெய்யன்-
    ஐய னானந்தமோனனருட்குருநாதன்,
    தன்பாதஞ்சென்னியில்வைத்தான்-
    என்னைத் தானறிந்தேன்மனந்தானிரந்தேனே-
    சங்கர சங்கர சம்பு. - (10)

    இறப்பும்பிறப்பும்பொருந்த-
    எனக் கெவ்வண்ம்வந்ததென்றெண்ணியான்பார்க்கில்,
    மறப்புநினைப்புமாய்நின்ற-
    வங்ச மாயாமனத்தால்வளர்ந்ததுதோழி-
    சங்கர சங்கர சம்பு. - (11)

    மனதேகல்லாலெனக்கன்றோ-
    தெய்வ மௌனகுருவாகிவந்துகைகாட்டி,
    எனதாம்பணியறமாற்றி-
    அவனின்னருள்வெள்ளத்திருத்திவைத்தாண்டி-
    சங்கர சங்கர சம்பு. - (12)

    அருளாலெவையும்பாரென்றான்-
    அத்தை யறியாதே

    சுட்டியென்னறிவாலேபார்த்தேன்,
    இருளானபொருள்கண்டதல்லால்-
    கண்ட வென்னையுங்கண்டிலனென்னேடிதோழி- சங்கர சங்கர சம்பு. - (13)

    என்னையுந்தன்னையும்வேறா-
    உள்ளத் தெண்ணாதவண்ணமிரண்டறநிற்கச்,
    சொன்னதுமோவொருசொல்லே-
    அந்தச்சொல்லால்விளைந்த சுகத்தையென்சொல்வேன்-
    சங்கர சங்கர சம்பு - (14)

    விளையுஞ்சிவானந்தபூமி-
    அந்த வெட்டவெளிநண்ணித்துட்டவிருளாங்,
    களையைக்களைந்துபின்பார்த்தேன்-
    ஐயன் களையன்றிவேறொன்றுங்கண்டிலன்தோழி-
    சங்கர சங்கர சம்பு. - (15)

    கண்டார்நகைப்புயிர்வாழ்க்கை -
    இரு கண்காணநீங்கவுங்கண்டோந்துயிறான்,
    கொண்டார்போற்போனாலும்போகும்-
    இதிற்குணமேதுநலமேதுகூறாய்நீதோழி-
    சங்கர சங்கர சம்பு - (16)

    நலமேதுமறியாதவென்னைச்-
    சுத்த நாதாந்தமோனமாநாட்டந்தந்தேசஞ்,
    சலமேதுமில்லாமலெல்லாம்-
    வல்லான் றாளாலென்றலை மீதுதாக்கினான்தோழி-
    சங்கர சங்கர சம்பு. - (17)

    தாக்குநல்லானந்தசோதி-
    அணு தன்னிற்சிறியவெனைத்தன்னருளாற்,
    போக்குவரவற்றிருக்குஞ்-
    சுத்த பூரணமாக்கினான்புதுமைகாண்மின்னே-
    சங்கர சங்கர சம்பு. - (18)

    ஆக்கியளித்துத்துடைக்குந்-
    தொழி லத்தனைவைத்துமெள்ளத்தனையேனுந்,
    தாக்கறநிற்குஞ்சமர்த்தன் -
    உள்ள சாக்ஷியைச்சிந்திக்கத்தக்கதுதோழி-
    சங்கர சங்கர சம்பு - (19)

    சிந்தைபிறந்ததுமாங்கே-
    அந்தச் சிந்தையிறந்துதெளிந்ததுமாங்கே,
    எந்தநிலைகளுமாங்கே-
    கண்ட யான்றானிரண்டற்றிருந்ததுமாங்கே-
    சங்கர சங்கர சம்பு. - (20)

    ஆங்கென்றுமீங்கென்றுமுண்டோ -
    சச்சி தானந்த சோதியகண்டவடிவாய்,
    ஓங்கிநிறைந்ததுகண்டாற்-
    பின்ன ரொன்றென்றிரண்டென்றுரைத்திடலாமோ-
    சங்கர சங்கர சம்பு. - (21)

    என்றுமழியுமிக்காயம்-
    இத்தை யேதுக்குமெய்யென்றிருந்தீருலகீர்,
    ஒன்றுமறியாதநீரோ-
    யம னோலைவந்தாற்சொல்லவுத்தரமுண்டோ-
    சங்கர சங்கர சம்பு. - (22)

    உண்டோநமைப்போலவஞ்சர்-
    மல மூறித்ததும்புமுடலைமெய்யென்று,
    கொண்டோபிழைப்பதிங்கையோ

    அருட் கோலத்தை மெய்யென்று கொள்ள வேண்டாமோ-
    சங்கர சங்கர சம்பு. - (23)

    வேண்டாம்விருப்பும்வெறுப்பும்-
    அந்த வில்லங்கத்தரலேவிளையுஞ்சனனம்,
    ஆண்டானுரைத்தபடியே-
    சற்று மசையாதிருந்துகொள்ளறிவாகிநெஞ்சே-
    சங்கர சங்கர சம்பு. - (24)

    அறிவாருமில்லையோவையோ-
    என்னை யாரென்றறியாதவங்கதேசத்தில்,
    வறிதேகாமத்தீவிற்சிக்கி-
    உள்ளவான்பொருடோற்கவோவந்தேனான்தோழி-
    சங்கரசங்கர சம்பு. - (25)

    வந்தவரவைமறந்து-
    மிக்க மாதர்பொன்பூமிமயக்கத்திலாழும்,
    இந்தமயக்கையறுக்க-
    எனக் கெந்தமெய்ஞ்ஞானவெழில்வாள்கொடுத்தான்-
    சங்கர சங்கர சம்பு. - (26)

    வாளாருங்கண்ணியர்மோகம்-
    யம வாதைக்கனலை வளர்க்குமெய்யென்றே,
    வேளானவனுமெய்விட்டான் -
    என்னின் மிக்கோர்துறக்கைவிதியன்றோதோழி-
    சங்கர சங்கர சம்பு. - (27)

    விதிக்கும்பிரபஞ்சமெல்லாம்-
    சுத்த வெயின்மஞ்சளென்னவேவேதாகமங்கள்,
    மதிக்குமதனைமதியார்-
    அவர் மார்க்கந்துன்மார்க்கஞ்சன்மார்க்கமோமானே-
    சங்கர சங்கர சம்பு. - (28)

    துன்மார்க்கமாதர்மயக்கம்-
    மனத் தூயர்க்குப்பற்றாதுசொன்னேன்சனகன்,
    தன்மார்க்கநீதிதிட்டாந்தம்-
    அவன் றானந்தமானசதானந்தனன்றோ-
    சங்கர சங்கர சம்பு. - (29)

    அன்றென்றுமாமென்றுமுண்டோ-
    உனக் கானந்தம்வேண்டினறிவாகிச்சற்றே,
    நின்றாற்றெரியுமெனவே-
    மறை நீதியெம்மாதிநிகழ்த்தினான்தோழி-
    சங்கர சங்கர சம்பு சிவ சங்கர சங்கர சங்கர சம்பு. - (30)


    55. அகவல்


    திருவருண்ஞானஞ்சிறந்தருள்கொழிக்குங்
    குருவடிவானகுறைவிலாநிறைவே.
    நின்றவொன்றேநின்மலவடிவே
    குன்றாப்பொருளேகுணப்பெருங்கடலே
    ஆதியுமந்தமுமானந்தமயமாஞ்
    சோதியேசத்தேதொலைவிலாமுதலே
    சீர்மலிதெய்வத்திருவருளதனாற்
    பார்முதலண்டப்பரப்பெலாநிறுவி
    அண்டசமுதலாமெண்டருநால்வகை
    ஏழுபிறவியிற்றாழாதோங்கும்
    அனந்தயோனியினினம்பெறமல்க
    அணுமுதலசலமானவாக்கையுங்
    கணமுதலளவிற்கற்பகாலமுங்
    கன்மப்பகுதிதொன்மைக்கீடா
    இமைப்பொழுதேனுந்தமக்கெனவறிவிலா
    ஏழையுயிர்த்திரள்வாழவமைத்தனை
    எவ்வுடலெடுத்தாரவ்வுடல்வாழ்க்கை
    இன்பமெனவேதுன்பமிலையெனப்
    பிரியாவண்ணமுரிமையின்வளர்க்க
    ஆதரவாகக்காதலுமமைத்திட்
    டூகமின்றியேதேகநானென
    அறிவுபோலறியாமையியக்கிக்
    காலமுங்கன்மமுங்கட்டுங்காட்டியே
    மேலுநரகமுமேதகுசுவர்க்கமும்
    மாலறவகுத்தனையேலும்வண்ணம்
    அமையாக்காதலிற்சமயகோடி
    அறம்பொருளாதிதிறம்படுநிலையிற்

    குருவாயுணர்த்தியொருவர்போலனைவரும்
    தத்தநிலையேமுத்திமுடிவென
    வாததர்க்கமும்போதநூல்களும்
    நிறைவிற்காட்டியேகுறைவின்றிவயங்க
    அங்கங்குநின்றனையெங்குமாகிச்
    சமயாதீதத்தன்மையாகி
    இமையோர்முதலியயாவருமுனிவருந்
    தம்மைக்கொடுத்திட்டெம்மையாளென
    ஏசற்றிருக்கமாசற்றஞான
    நலமுங்காட்டினைஞானமிலேற்கு
    நிலையுங்காட்டுதனின்னருட்கடனே.


    56. வண்ணம்


    அருவென் பனவுமன்றி உருவென் பனவுமன்றி
          அகமும் புறமுமன்றி முறைபிற ழாது
    குறியுங் குணமுமன்றி நிறைவுங் குறைவுமன்றி
          மறையொன் றெனவிளம்ப விமலம தாகி
    அசலம் பெறவுயர்ந்து விபுலம் பெறவளர்ந்து
          சபலஞ் சபலமென்று ளறிவினர் காண
    ஞானவெளியிடைமேவுமுயிராய்,
    அனலொன் றிடவெரிந்து புகைமண் டிடுவதன்றுளு
          புனலொன் றிடவமிழ்ந்து மடிவில தூதை
    சருவும் பொழுதுயர்ந்து சலனம் படுவதன்று
          சமர்கொண் டழிவதன்றொ ரியல்பின தாகும்

    அவனென் பதுவுமன்றி அவளென் பதுவுமன்றி
    அதுவென் பதுவுமன்றி எழில்கொடு லாவும்
    ஆருநிலையறியாதபடியே,

    இருளென் பதுவுமன்றி ஒளியென் பதுவுமன்றி
          எவையுந் தனுளடங்க ஒருமுத லாகும்
    உளதென் பதுவுமன்றி இலதென் பதுவுமன்றி
          உலகந் தொழவிருந்த வயன்முத லோர்கள்
    எவரும் கவலைகொண்டு சமயங்களில் விழுந்து
          சுழலும் பொழுதிரங்கி அருள்செயு மாறு
    கூறரியசகமாயையறவே,

    எனதென் பதையிகழ்ந்த அறிவின் றிரளினின்று
          மறிவொன் றெனவிளங்கு முபயம தாக
    அறியுந் தரமுமன்று பிறியுந் தரமுமன்று
          அசரஞ் சரமிரண்டி னொருபடி யாகி
    எதுசந் ததநிறைந்த தெதுசிந் தனையிறந்த
          தெதுமங் களசுபங்கொள் சுகவடி வாகும்
    யாதுபரமதைநாடியறிநீ,

    பருவங் குலவுகின்ற மடமங் கையர் தொடங்கு
          கபடந் தனில்விழுந்து கெடுநினை வாகி
    வலையின் புடைமறிந்த மறியென் றவசமுண்டு
          வசனந் திரமுமின்றி அவரித ழூறல்
    பருகுந் தொழிலிணங்கி யிரவும் பகலுமின்சொல்
          பகரும் படிதுணிந்து குழலழ காக
    மாலைவகைபலசூடியுடனே,

    பதுமந் தனையிசைந்த முலையென் றதையுகந்து
    வரிவண் டெனவுழன்று கலிலென வாடுஞ்
    சிறுகிண் கிணிசிலம்பு புனைதண்டை கண்முழங்கும்
    ஒலிநன் றெனமகிழ்ந்து செவிகொள நாசி
    பசுமஞ் சளின்வியந்த மணமுந் திடமுகந்து
    பவமிஞ் சிடவிறைஞ்சி வரிசையி னூடு
    காலின்மிசைமுடிசூடிமயலாய்,

    மருளுந் தெருளும்வந்து கதியென் பதைமறந்து
    மதனன் சலதிபொங்க விரணம தான
    அளிபுண் டனைவளைந்து விரல்கொண் டுறவளைந்து
    சுரதஞ் சுகமிதென்று பரவச மாகி
    மருவுந் தொழின்மிகுந்து தினமுந் தினமும்விஞ்சி
    வளரும் பிறைகுறைந்த படிமதி சோர
    வானரமதெனமேனிதிரையாய்,

    வயதும் படவெழுந்து பிணியுந் திமிதிமென்று
    வரவுஞ்செயலழிந்து ளிருமலு மாகி
    அனமுஞ் செலுதலின்றி விழியுஞ் சுடர்களின்று
    முகமுங் களைகளின்று சரியென நாடி
    மனையின் புறவிருந்த வினமுங் குலைகுலைந்து
    கலகஞ் செயவிருண்ட யமன்வரும் வேளை
    ஏதுதுணைபழிகாரமனமே. - (1)


    தாயுமானசுவாமிகள் பாடல்கள் முற்றிற்று

    ---------------

    அருள்வாக்கிய அகவல்.

    இஃது தாயுமானசுவாமிகளுடைய மாணாக்கராகிய
    அருளையரென்பவர் மேற்படி சுவாமிகளைத் துதிசெய்தது.


    திருவளர்கருணைச்சிவானந்தபூரண
    மொருவருமறியாவொருதனிச்சித்து
    நவந்தருபேதமாய்நாடகநடித்துற்
    பவந்தனைநீக்கிப்பரிந்தருள்பராபரங்
    கண்ணுங்கருத்துங்கதிரொளிபோல
    நண்ணிடவெனக்குநல்கியநன்மை
    யொன்றாய்ப்பலவாயொப்பிலாமோனக்
    குன்றாய்நிறைந்தகுணப்பெருங்குன்ற
    மண்ணையும்புனலையும்வளியையுங்கனலையும்
    விண்ணையும்படைத்தவித்திலாவித்துப்
    பந்தமனைத்தையும்பாழ்படநூறியென்
    சிந்தையுட்புகுந்தசெழுஞ்சுடர்ச்சோதி
    விள்ளொணாஞானம்விளங்கியமேலோர்
    கொள்ளைகொண்டுண்ணக்குறைவிலாநிறைவு
    தாட்டாமரைமலர்த்தாணினைப்பவர்க்குக்
    காட்டாவின்பங்காட்டியகதிநிலை
    வாக்கான்மனத்தான்மதித்திடவரிதென
    நோக்காதிருக்கநோக்கியநோக்க
    மாதியாயறிவாயகண்டமாயகண்ட
    சோதியாய்விரிந்துதுலங்கியதோற்றம்

    பரவெளிதன்னிற்பதிந்தவென்னுளத்தின்
    விரவிவிரவிமேற்கொளும்வெள்ளஞ்
    சுட்டுக்கடங்காச்சோதியடியார்
    மட்டுக்கடங்கும்வான்பெருங்கருணை
    எல்லைக்கடங்காவேகப்பெருவெளி
    தில்லைப்பொதுவிற்றிருநடத்தெய்வம்
    வாதவூரெந்தையைவரிசையாய்விழுங்கும்
    போதவூர்மேவுகர்ப்பூரவிளக்குச்
    சுகரையகண்டத்தூவெளியெல்லாந்
    திகழவேகாட்டுஞ்சின்மயசாக்ஷி
    செழுந்தமிழப்பரைச்சிவலிங்கமாகி
    விழுங்கியஞானவித்தகவேழ
    மெழிறருபட்டினத்திறைவரையென்று
    மழிவிலாவிலிங்கமாக்கியவனாதி
    சாந்தபூமிதண்ணருள்வெள்ள
    மார்ந்தநீழலசையாக்ககனம்
    பரவுவார்நெஞ்சிற்பரவியமாட்சி
    யிரவுபகலற்றவேகாந்தக்காட்சி
    யாட்சிபோலிருக்குமகிலந்தனக்குச்
    சாக்ஷியாயிருக்குந்தாரகத்தனிமுத
    லாணும்பெண்ணுமலியுமல்லாததோர்
    தாணுவாய்நின்றசத்தாந்தனிச்சுட
    ரெள்ளுமெண்ணெயுமெப்படியப்படி
    யுள்ளும்புறமும்புமுலாவியவொருபொரு
    ளளவிலாமதந்தொறுமவரவர்பொருளென

    வுளநிறைந்திருக்குமொருபொற்பணிதி
    துள்ளுமனப்பேய்துடிக்கத்தறிக்கக்
    கொள்ளுமோனவாள்கொடித்திடுமரசு
    பெரியபேறுபேசாப்பெருமை
    யரியவுரிமையளவிலாவளவு
    துரியநிறைவுதோன்றாவதீதம்
    விரியுநல்லன்புவிளைத்திடும்விளைவு
    தீராப்பிணியாஞ்செனனமறுக்க
    வாராவரவாய்வந்தசஞ்சீவி
    யாலைக்கரும்புபாகமுதக்கட்டிநீள்
    சோலைக்கனிபலாச்சுளைகதலிக்கனி
    பாங்குறுமாங்கனிபாறேன்சருக்கரை
    யோங்குகற்கண்டுசேர்த்தொன்றாய்க்கூட்டி
    யருந்தியரசமெனவறிஞர்சமாதியிற்
    பொருந்தியவின்பம்பொழிசிற்சுகோதய
    மெங்கணுநிறைந்தவியல்பினையெனக்குச்
    செங்கையால்விளங்கத்தெரித்தமெய்த்தேசிகன்
    தன்னையறிவித்துத்தற்பரமாகி
    யென்னுளத்திருந்தருளேகநாயக
    னடிமுடியில்லாவரும்பொருடனக்கு
    முடியடியிதுவெனமொழிந்திடுமுதல்வன்
    மெய்யலான்மற்றவைமெய்யலவெல்லாம்
    பொய்யெனவறியெனப்புன்னகைபுரிந்தோ
    னருளும்பொருளுமபேதமாயிருந்து
    மிருதிறனென்னுமியலுமுண்டென்றோ
    னருளுனக்குண்டேலருளும்வெளிப்படும்
    பொருண்மயந்தானேபொருந்துமென்றுரைத்தோன்
    சத்தசத்திரண்டுதன்மையுந்தானே
    யொத்தலாற்சதசத்துனக்கெனவுரைதோ
    னாணவமறாவிடினருளுறாதென்னக்
    காணருநேர்மையாற்காணவேயுரைத்தோன்
    சென்மமுள்ளளவுந்தீராதிழுக்கும்
    கன்மம்விடாதெனக்காட்டியவள்ள
    லுளதிலதெனவுமுறுதலான்மாயை
    வளமிலதெனவும்வகுத்தினிதுரைத்தோ
    னில்லறத்திருந்துமிதயமடக்கிய
    வல்லவன்றானேமகாயோகியென்றோன்
    துறவறத்திருந்துஞ்சூழ்மனக்குரங்கொன்
    றறவகையரறியானஞ்ஞானியென்றோ
    னிறவாமனந்தானிறக்கவுணர்த்திப்
    பிறவாவரந்தரும்பேரறிவாள
    னத்தனதருளாலனைத்தையுமியக்குஞ்
    சுத்தமாமாயையின்றோற்றமென்றுரைத்தோ
    னிருண்மலமகலவிசைந்ததிலழுத்தும்
    பொருளருட்டிரோதைப்பொற்பெனப்புகன்றோன்
    வீறுசிவமுதல்விளம்பியபடியே
    யாறுமனாதியென்றறிஞருக்குரைப்போன்
    கொல்லாவிரதங்குவலயத்தோர்க
    ளெல்லாம்பெறுமின்னென்றியம்பியதயாநிதி
    தருமமுந்தானமுந்தவமும்புரிபவர்க்

    குரிமையாயவரோடுறவுகலப்பவன்
    றன்னுயிர்போலத்தரணீயின்மருவிய
    மன்னுயிரனைத்தையும்வளர்த்திடும்வேந்தன்
    களவுவஞ்சனைகள்செய்கருமிகடமக்குந்
    தெளிவுவந்துறவருள்செய்திடுந்திறத்தோன்
    தான்பெறும்பேறுசகமெலாம்பெறவே
    வான்பெருங்கருணைவழங்கியமாரி
    தஞ்சமென்றடைந்ததாபதர்தம்மை
    யஞ்சலென்றாளுமறிஞர்சிகாமணி
    சீவகோடிகளுஞ்சித்தர்கோடிகளும்
    யாவரும்புகழ்யாவையுமுணர்ந்தோன்
    யானெனதென்னாலிறைவனெம்பெருமான்
    றானவனாகியதலைவனெங்கோமா
    னருணகிரியார்க்காறுமுகன்சொலும்
    பொருணலமல்லதுபொருளெனமதியான்
    பூதமுதலாப்பொலிந்திடுநாத
    பேதமுங்கடந்தபெருந்தகைமூர்த்தி
    மூலாதாரமுதலாயுள்ள
    மேலாதாரமும்வெறுவெளிகண்டவன்
    மண்டலமூன்றிலுமன்னியவுருவிலுங்
    கண்டவையத்திலுங்கடவுளாய்நின்றோன்
    பகர்சமயந்தொறும்பரமேயிருந்து
    சுகநடம்புரியுந்தொழிலெனச்சொன்னோன்
    பேதவபேதபேதாபேத
    போதமிதுவெனப்புகன்றிடும்புண்ணிய

    னதுநானெனவேயாற்றிடுமனுபவஞ்
    சதர்வேதாந்தத்தன்மையென்றுரைத்தோ
    னல்லும்பகலுமறிவானோர்க்குச்
    சொல்லும்பொருளுஞ்சுமையெனச்சொன்னோன்
    சுதனேகுருவாஞ்சுவாமிநாயகற்கெனி
    னதிகமெய்ஞ்ஞானமல்லவோவென்றோ
    னேசயோகத்துறுநிருபரெல்லாந்தொழு
    மிராஜயோகத்திரையிராஜயோகத்தான்
    பொறுமைதெளிவுபுனிதவாசார
    மறுவிலாவண்மைவாரமியற்கை
    தண்ணமர்சாந்தந்தயங்கியகீர்த்தி
    யெண்ணெண்கலைபயிலிணையிலாக்கல்வி
    நல்லவிரக்கநடுநிலைசத்திய
    மில்லையென்னாமலெவர்க்குந்தருங்கொடை
    நற்குணனெல்லாநண்ணியபெருந்தகை
    சிற்குணவாரிதிருவருட்செல்வன்
    கரமேலெடுத்துக்கருத்துறவணங்கிப்
    பரமேயுனக்குப்பரமெனப்பகர்ந்தோ
    னாலடிமேவுமரசினையடுத்தே
    சீலமெய்ஞ்ஞானந்தெளிந்தனனென்னவுஞ்
    சித்தமௌனிதிடசித்தமாக
    வைத்தநிலையின்வளர்ந்தனனெனவு
    மூலன்மரபின்முளைத்தமௌனிதன்
    பாலன்யானெனவும்பரிவொடும்பகர்ந்தோன்
    வடமொழியியற்கையின்மகிமையையுணர்ந்து

    திடமுறமுப்பொருட்டிறத்தையுந்தெளிந்து
    கண்டமுதென்னக்கனிரசமென்னத்
    தண்டமழ்மாரிதன்னைப்பொழிந்து
    சித்தியுமுத்தியுஞ்சிறந்தருள்கொழிக்கு
    நித்தியநிரஞ்சனநிராலம்பநிறைவைப்
    பாடியுநாடியும்பணிந்தெழுந்தன்பா
    லாடியுமரற்றியுமகங்குழைவெய்தியு
    முடலங்குழையவுரோமஞ்சிலிர்ப்பப்
    படபடென்றுள்ளம்பதைத்துப்பதைத்துப்
    பாங்குறுநெட்டுயிர்ப்பாகிப்பரதவித்
    தேங்கியேங்கியிரங்கியிரங்கி
    யோய்ந்தபம்பரம்போலொடிங்கியேசிறிது
    மேய்ந்தவிழிகளிமைப்பதுமின்றிச்
    சோர்ந்துசோர்ந்துதுவண்டுதுவண்டுமெய்
    யார்ந்தவன்போடவசமுற்றடிக்கடி
    யுண்ணடுக்குறவேயுருகியேசற்றுத்
    தண்ணமர்மொழியுந்தழுதழுத்திடவே
    யுள்ளும்புறம்புமொருமித்துருகி
    வெள்ளநீர்போல்விழிநீர்பெருக்கிக்
    கன்றுபசுவைக்கருதிக்கதறிச்
    சென்றுசென்றோடித்திகைப்பதுபோல
    வென்புநெக்குடையவிருகரங்குவித்துப்
    புன்புலால்யாக்கைபொருந்தாதினியென
    வுணர்ந்துணர்ந்தன்பாயுவகைமேற்கொண்டினிக்
    கணம்பிரியேனெனக்கருதியேகுறித்துத்

    திருவுருவெல்லாந்திருநீறிலங்க
    விருகரநளினமியன்முடிகுவித்துப்
    பூரணசந்திரன்போலொளிகாட்டுங்
    காரணவதனங்கவின்குறுவெயர்வுற
    விளநிலாவெனவேயிலங்கியசிறுநகை
    தளதளவென்னத்தயங்கியெழில்பெற
    வித்தன்மையெல்லாமிசைந்துமிவனருள்
    சித்தெனச்சிவகதிதேர்ந்தவருரைப்பப்
    பாத்திரமாடப்பரிவுடனாடிச்
    சாத்திரங்காட்டித்தயவுசெய்தருளும்
    வல்லவனெனவேமன்னுயிர்க்காக
    வெல்லையிலன்பனிவனெனவிளங்கி
    யீனவுலகத்தியற்கைபொய்யென்றே
    ஞானநூன்மெய்யெனநவின்றினிதிரங்கிக்
    கேவலசகலங்கீழ்ப்படமேலாய்
    மேவருஞ்சுத்தமெய்யினைநல்க
    வருளேயுருவுகொண்டவனியில்வந்த
    பொருளேயிவனெனப்பொலிந்திடும்புனிதன்
    சைவஞ்சிவனுடன்சம்பந்தமென்பது
    மெய்வளர்ஞானம்விளக்குமென்றிசைத்தோன்
    கதிர்விழியொளியுறக்கலத்தல்சித்தாந்த
    விதிமுறையாமெனவிளம்பியமேலோன்
    முடிவினிலாகமமுறைமையினுண்மையை
    யடியரைக்குறித்துரைத்தருளியவண்ணல்
    சிதம்பரநேர்மைதிறமாவுரைத்திறை

    பதம்பரவெனப்பகர்பரமமெய்ஞ்ஞானி
    முத்திபஞ்சாக்கரமுறைமையிலயிக்கியஞ்
    சத்தியமிதுவெனச்சார்ந்தவர்க்குரைத்தோ
    னஞ்செழுத்துள்ளேயனைத்தையுங்காட்டியென்
    னெஞ்சழுத்தியகுருநீதிமாதவ
    னெல்லாநிறைந்தவிறைவன்செயலெனக்
    கல்லாவெனக்குங்கருணைசெய்கடவுள்
    குருவருளாலேகூடுவதல்லாற்
    றிருவுருளுறாதெனத்தெரிந்திடவுரைத்தோன்
    குருவுருவருளெனக்கொண்டபின்குறையாப்
    பொருண்மயமாமெனப்புகன்றிடுபோத
    னெந்தமூர்த்திகளையுமெழிற்குருவடிவெனச்
    சிந்தையிற்றியக்கறத்தேர்ந்தவர்க்குரைத்தோன்
    சதாசிவமென்றபேர்தான்படைத்ததுதா
    னெதாவதேபொருளென்றெடுத்தெடுத்துரைத்தோன்
    கல்லானைகன்னல்கவர்ந்திடச்செய்தவ
    னெல்லாம்வல்லசித்தெம்மிறையென்றோ
    னெவ்வுயிர்தோறுமிறைமேவியதிறஞ்
    செவ்வியபிரம்படிசெப்பிடுமென்றோ
    னெவ்வணமெவரவரிசைத்தனரவரவர்க்
    கவ்வணமாவனெம்மானெனவறைந்தோ
    னொருபாணனுக்கேயொருசிவனாட்படின்
    வருமடியார்திறம்வழுத்தொணாதென்றோன்
    சிவனடியாரைச்சிவனெனக்காண்பவ
    னெவனவன்சிவனேயென்றெடுத்துரைத்தோன்

    விருப்புவெறுப்பினைவேரறப்பறித்துக்
    கருப்புகாதென்னைக்காத்தருள்செய்தோ
    னிருசொல்லுறையாதியானின்பமெய்த
    வொருசொல்லுறைத்தவுயர்குணபூதர
    னத்துவாமார்க்கமாரையுமகற்றி
    தத்துவாதீதத்தன்மையைத்தந்தோன்
    திருமகண்மருவியதிகழ்வளமறைசையில்
    வருமுணர்வாளன்மருளிலாமனத்தா
    னெண்ணியவெண்ணமெல்லாந்தெரிந்தெனக்குத்
    தண்ணருள்செய்தவன்றாயுமானவ
    னொருமொழிபகர்ந்தவுதவியாலவன்ற
    னிருபதமுப்போதிறைஞ்சிவாழ்த்துவனே.


    முற்றிற்று.
    ---------

This file was last updated on 10 August 2008.
Feel free to Webmaster.